Skip to main content

AS YOU LIKE IT (THAMIZH)

                                                      
                                                      Play by Shakespeare  ( 1600)
Retold by  Mary Lamb  (1800)         ( Tales from Shakespeare)
Adaptation/translation  by RSR  in thamizh  தமிழ் 
   AS YOU LIKE IT original english tale  at
https://comediesmarylamb.blogspot.com/2020/02/as-you-like-it.html?view=flipcard
------------------------------------------------------
Film with  subtitles at   
https://www.youtube.com/watch?v=u9hTxzLHU3I
--------------------------------------------------------------------------
INDEX TO THE OTHER TALES  IN THAMIZH AT
https://shakespeare4tamils.blogspot.com/p/index-page.html

original play by the BARD
http://www.opensourceshakespeare.com/views/plays/plays.php

http://www.opensourceshakespeare.com/views/plays/playmenu.php?WorkID=asyoulikeit

                             ங்கள்  விருப்பம் 

    நீலாம்புரம்  மிகவும்  அழகான  சிறிய ராஜ்யம்..  அடர்ந்த காட்டுப்   பகுதியில், என்றும் வற்றாத ஒரு   சிற்றாற்றின்   கரையில், மிகவும்    செழிப்பான  பச்சைப்பசேல்  என்ற   ,வயல்   வெளிகளும்,  அவற்றினூடே  அமைதியாக  வளைந்து, நெளிந்து  செல்லும்  தெள்ளிய  நீரோடைகளும்,  அருமையான  மணம்  வீசும்  மலர்ச்சோலைகளும், இனிய  கனிகள்  தரும்   தருக்களும், வானில் சிறகடித்துக்  கூட்டம், கூட்டமாய்ப்  பறந்து    மகிழும்
புள்ளினங்களும்,   ஆற்றின்   அக்கரையில் , இருந்த  கானகத்தில்  ,துள்ளி  
 ஓடும் புள்ளிமான்களும்   அவற்றுடன் போட்டியிட்டு மகிழும்  
 குறுமுயல்களும் ,   நிறைந்த ஒரு   ஸ்வர்க பூமி.   

      நீலாம்புரத்தின்   குறுநில மன்னன் மித்ரவர்மன்.  மிகவும்   நல்லவன். 
   எவரையுமே எதற்காகவும்  எந்நாளும்  கடிந்து  பேசி   அறியாதவன்..   எனவே
 அந்த  ராஜ்யத்தின் மக்கள்   அனைவரும்,  அவனை  உளமார  மரியாதை  
கொண்டு   அன்புடன்   கொண்டாடினர்.

     மித்ரவர்மனுக்கு ஒரே ஒரு  செல்வமகள்.   அவள்   பெயர்  ரூபவதி . மிகவும் 
   அழகானவள்.. 

 இவ்வளவு நல்ல மனம்    கொண்ட   மித்ரவர்மனுக்கு,   சற்றும் 
பண்பேயில்லாத   கொடூர மனம்  கொண்ட   கேசவர்மன் தம்பியாக வந்து  
  வாய்த்தான். பதவிப்பித்து  பிடித்த கேசவர்மன்,   தனது  அண்ணனிடமிருந்து 
ராஜ்ய   அதிகாரத்தைப்    பிடுங்கிக்கொண்டு, அவனைக்    காட்டுக்குள்  
 விரட்டிவிட்டு, மனம்   போனபடி, கொடுங்கோல்  ஆட்சி  நடத்தி  வந்தான்.


 அவனுக்கு மாலதி  என்று ஒரு   மகள்    இருந்தாள்   அண்ணனை    
விரட்டிவிட்டாலும், தனது  மகள்  மாலதிக்கு   விளையாட்டுத்  துணையாக  
இருக்க அண்ணன்  மகள்   ரூபவதியை    அரண்மனையிலேயே 
வைத்துக்கொண்டான்.

மித்ரவர்மன்   காட்டிற்குச்   சென்றபோது,  அவனோடு   கூடவே   அவனது  
 அரசவையின்,   மேன்மக்கள்  அனைவரும்,   தாங்களும்,   தஙகளது    
,குடும்பம், மாளிகை , செல்வம்  அனைத்தையும்  துறந்து  வனவாசத்தை
மனமுவந்து    . ஏற்று,  தங்களது     மன்னரின்  நட்பே இவை  எல்லாவற்றிலும்  
மேலானது என்று     மகிழ்ச்சியோடு   காட்டில்  வாழ்ந்து  .வந்தனர்
மித்ரவர்மன், மிகவும்   பண்பட்ட   . ,மனம்   . கொண்டவன்.
1pm – 27-3-2020


   ரூபவதிக்கு  மாலதி  ,  இரண்டு  வயது   இளையவள்.. சிறு வயது   முதலே
இருவரும்  ஒருவரை  ஒருவர் உயிர்போல  பிரியம்  கொண்டு  
வளர்ந்தவர்கள்..   ஓரளவு,  விபரம்   தெரிந்த வயது    வந்தபோது,  மாலதிக்குத்  
 தனது தந்தை  , செய்திருந்த  அரசியல் அக்கிரமம் புரிய   வந்தது... 
உண்மையான  ராஜகுமாரி  தானல்ல, ரூபவதிக்குத்தான் அந்த உரிமை   என்று  தெரிந்து கொண்டாள் . அவள்  மீது மிகவும் இரக்கம் கொண்டு அதுமுதல்  இரட்டிப்பாக  அன்பு  செலுத்தி   வந்தாள் .  ரூபவதி  சற்று  முகம்  வாடினாலும், அவளை  அன்புடன்  தேற்றி  மகிழ்வித்து வந்தாள் .

    ஒரு   நாள், ஒரு   ,பணியாளன்  அவர்களிடம் வந்து,  "  இன்று  அரசவை  
 மண்டபத்தில், ஒரு  மல்யுத்தப்   போட்டி   நடைபெறவுள்ளது.  நீங்கள் அங்கு  
 வர  அரசர்  "பணித்தார்  என்றான் .  ரூபவதியும், மாலதியும்  அங்கு    
சென்றபோது,   கேசவர்மன் " பெண்களே!  இன்று  நடக்கும் போட்டியில் 
மிகவும்   திறமையான  பலசாலி  மல்லனுக்கு    எதிராக, ஒரு   இளம் வயதுப்  
 பையன் ,  போட்டியிட   வந்திருக்கிறான்.. நீங்கள்   அவனிடம்   பேசி,  
போட்டியிலிருந்து  விலகச்    சொல்லுங்கள்.  முடிவு  இப்போதே  
தெரிந்ததுதான்.  ஏன் வீணாகப் போட்டியிட்டு,    கை  கால்  இழந்து   பின்னர்  
தவிக்க  வேண்டும்?  அவனை நினைத்தால் பாவமாக  இருக்கிறது. நான்  
 ஏற்கனவே  சொல்லிப் பார்த்துவிட்டேன்.   அவன் கேட்பதாக   இல்லை.. 
நீங்கள்  இருவரும்  அவனிடம்  சொன்னால்  ஒருவேளை  போட்டியிலிருந்து  
 விலகிக்கொள்வான் . முயற்சி  செய்யுங்கள்.   என்றான்.

    எனவே ரூபவதியும்    மாலதியும் , அவனிடம்   சென்று  அவ்வாறே  
 கூறினார்கள்..   ஆனால், அந்த   இளைஞன் கேட்பதாக  இல்லை.  
 'தங்களைப்போன்ற உயர்ந்த குல பெண்மணிகள்  என் மீது   இவ்வளவு  
அக்கறை கொண்டு,   பேசுவதே  எனது பாக்கியம்.  போட்டியில்    வென்றால்,
அந்த  வெற்றியைத்    தங்களுக்குக்   காணிக்கையாக   அளிப்பேன்.  தோற்று  
 இறந்துவிட்டால்,  அதனால் என்ன  ஆகப்போகிறது?  பூமிக்குப்  பாரமாக  
பெருமை  ஏதும்  இல்லாமல்  வாழும் ஒரு  ஜென்மம்  முடிந்து  போகும்.  
அவ்வளவுதானே !.   முடியட்டும் . எப்படியும்  நான்   வெற்றி பெறுவேன்.  
எனக்காக   நீங்கள்   வேண்டுங்கள்'   என்று   கூறி  போட்டியிடுவதில்  
உறுதியாக  இருந்தான்.   இந்த இரண்டு   அழகிய இளம்  பெண்களின்  
அக்கறையும்,  ஆதரவும்,  அந்த   இளைஞனுக்கு   அபார   உற்சாகம்    
அளித்தது.

போட்டியில்   யாருமே  எதிர்பாராத  சாகசங்கள்   நிகழ்த்தி  மலை  போன்ற
உருவம்  கொண்ட மல்லனை   தூக்கிச்  சுழற்றிக்  கீழே  எறிந்து   மாபெரும் 
வெற்றி    பெற்றான்.  அடிபட்ட  மல்லனுக்கு  எழவும் முடியவில்லை.  பேச்சும் 
 போய்விட்டது.

கேசவர்மனுக்கும்  கூட  அந்த  இளைஞனைப்  பிடித்துவிட்டது!

 ' பையா!  உனது  இந்த  வெற்றி   மிகவும்   பிரமாதம்.. எனது    பாராட்டுக்கள்
உன் பெயர்  என்ன?   உனது   தந்தையின்  பெயர்  என்ன?'  என்று  கேட்டான்.

       'அரசே!  என்  பெயர்  குணசேகரன்   நான்  இந்த    ராஜ்யத்தின்,  உதயபுர   ,
 பகுதியின்  பிரபு  வஜ்ராங்கனின்  இளைய மகன் .  அவர் பல  ஆண்டுகளுக்கு
  முன்  இறந்து  விட்டார்.  ' என்றான்.

    வஜ்ராங்கன் ,   மித்ரவர்மனுக்கு மிகவும்   பிடித்த  கோமான்.   மித்ரவர்மனின் ஆதரவாளர்கள்  எவரையும்,  கேசவர்மனுக்கு   பிடிக்காது. எனவே  அவன்   உடனேயே மனம்  மாறி, ' நீ   வேறு  யாராவது  ஒருவரின் குடும்பத்தில்  பிறந்திருந்தால்  நன்றாக  இருந்திருக்கும் ' என்று   வெறுப்புடன்  கூறி , அரசவையிலிருந்து     அவசரமாக  வெளியேறிவிட்டான்
  -------------------     
        போட்டி  நடந்தபோது,  ரூபவதி,  படபடக்கும்   நெஞ்சோடு,  இளைஞன்   வெற்றி பெற  பிரார்த்தனை  செய்துகொண்டிருந்தாள் . அவன் வெற்றி  
 ,பெற்றவுடன் ,     ஆனந்தம் அடைந்தாள் . அதன்  பிறகு,  அவனது   தந்தை  
 வஜ்ராங்கன்,  தனது   தந்தையின்   அத்யந்த நண்பர்   என்று தெரிந்ததும் 
அதையும் விட மகிழ்ந்தாள் .
-----------------------------------
to be continued  -29-3-2020
------------------------------------


  'இந்த  வீர இளைஞன் எனது தந்தையின் நண்பரின்  திருமகன் என்று 
தெரிந்திருந்தால்,  போட்டியில்  கலந்து கொள்ள வேண்டாமென்ற எனது  
 வேண்டுகோளை கண்ணீருடன்  கலந்து அளித்திருப்பேன்என்றாள்
 ரூபவதி.  

கேசவர்மனின்  அவமரியாதை இளைஞன்   குணசேகரன் 
மனதை  புண்படுத்தியது.  அவனை தேற்றி   ஆறுதல்   சொல்ல, 
 ரூபவதியும், மாலதியும்,  அவனிடம் சென்று   பாராட்டி இனிமையாகப் 
பேசினார்கள்.  குணசேகரனுக்கு   மிகவும்  ஆறுதலாகிவிட்டது.

  அதிலும்,ரூபவதியின்,   பார்வையும்,  அவளது  விசேஷ  இனிமையான 
 மொழியும்,   அவனை    அடிமைப்படுத்திவிட்டன,  நன்றியிலும் 
 மகிழ்ச்சியிலும்,  அவனுக்கு   பேச நா எழவில்லை.    தனது  நேசத் 
தமக்கை  ,  அந்த  இளைஞனிடம்   பிரேம    வலையில்  விழுந்துள்ளதை
 ,  மாலதி உடனேயே  உணர்ந்து  'வா  போகலாம்,  என்று  விரைந்தாள்.  

சற்று  தூரம்  சென்ற ரூபவதி   தான்  மட்டும் திரும்பிவந்து,  தனது   கழுத்தில்  இருந்த தங்கச்   சங்கிலியை   கழட்டி,    குணசேகரனின் கழுத்தில்    அணிவித்து, " எனது   தற்போதைய நிலைக்கு  இதுதான்  என்னால் தர  முடிந்த வெகுமதி. ' என்று   கூறி   அகன்றாள் 

  குணசேகரனுக்கு  அந்த   தேவதையின்   முகமும்,   பார்வையும், வார்த்தைகளும்,   ,செயலும் , அவளது  மனதைத்  தெளிவாக உணர்த்தின. தனது   நெஞ்சத்தில் அந்த   தேவதையை ,  நிரந்தரமாக  ஏற்றுக்கொண்டுவிட்டான்..  ஆயினும் தனது  தற்போதைய    தாழ்ந்த
நிலையில்,   ரூபவதி  போன்ற அரச  குலப்    பெண்ணை 
நினைக்கக்க்கூட   தகுதி  கிடையாது  என்று   மனம்  நொந்து ,
 அரசவையை  விட்டு,   சோகமுடன்  வெளியேறினான்.

      அவன்  அவ்வளவு வருத்தப் பட்டிருக்கத்   தேவையில்லை.  
 ஏனெனின், அவனது   சாகசமும்,  தீரமும்,  நீலாம்பூர்  ராஜ்யத்தின்,  மூலை
 முடுக்கெல்லாம்   ஒரே நாளில்   பரவிவிட்டது.  ஏற்கனவே அவனது 
தந்தை  அவரது வீரத்திற்கும்,    திறமைக்கும்,   நேர்மைக்கும்,  
 கருணைக்கும்  பெயர்   பெற்றவர்.  அவருக்கு  இரண்டு   புதல்வர்கள். 
மூத்தவன்  பெயர்  லோபசேகரன்.  .  பேராசையும்,  கெட்ட  
 புத்தியும்   கொண்டவன். அவனது  தந்தை  இறக்கும்போது,,  மிகவும் 
 சிறுவனாக இருந்த   குணசேகரனை  அவன்  பொறுப்பில்  விட்டுச் 
 சென்று   ,குணசேகரனை  நல்ல  படிப்பும்,    பண்பும் கலைகளும்,  
 அறிந்த  இளைஞனாக வளர்க்கச்   சொல்லி, தனது  ஆஸ்தியில் 
சரிபாதியை குணசேகரனுக்கு    அளித்திருந்தார்.  ஆனால்,  
 லோபசேகர    மூர்க்கன்,   தனது   தம்பியின்   செல்வங்களை 
 அபகரித்துஅவனை   ஒரு   சற்றும்  படிப்பில்லாத  பண்ணையாள் 
போல   நடத்தி, வேலை  வாங்கி  அவமானப்   . படுத்தினான். 

  என்றாலும், குணசேகரன்,  தோற்றத்திலும், குணத்திலும் அவனது
 தந்தை    போலவே    இருந்தான்.   அதனால்,  உதயபுர  மக்களுக்கு
குணசேகரன்  மீது அபார  மதிப்பும்,  மரியாதையும்,  அன்பும்   இருந்தது. 
இது  லோபசேகரனின்  பொறாமைக்கு   .இடமளித்தது    உண்மையில், அண்மையில்   நடந்த மல்யுத்தப் போட்டியில்,  குணசேகரனைக்  கொன்று  விட ,  மல்லனுக்கு    உத்தரவிட்டிருந்தான்..
 இப்போது  குணசேகரன்  போட்டியில்   வென்று  விட்டதை  
 அறிந்தவுடன்,  அவனைக் கொல்வதற்கு,    ரகசியமாக,அவன்   உறங்கும் 
 வேளையில்,அவனது   குடிலுக்குத்  தீ வைத்து  எரித்துக்  கொல்ல 
 திட்டம்போட்டிருந்தான். 

   லோபசேகரனின்    பண்ணையில், அவனது  தந்தையின்  
 காலத்திலிருந்தே  நெடுநாட்களாக  ஊழியம்  செய்துவந்த ஒரு 
வயோதிக  நல்லவன் இருந்தான். அவன்  பெயர்.   தருமன்.. அவனுக்கு 
குணசேகரனை  மிகவும்  பிடிக்கும்.  தர்மனுக்கு  லோபசேகரனின் 
கெட்ட   திட்டம்  தெரிந்து  போய்விட்டது. உடனே  அவன்
 தன்னிடமிருந்த    சிறிது  சிறிதாக  பல ஆண்டுகளாகச்  
 சேர்த்துவைத்திருந்த சில்லரைக்  காசுப்   பையை  குணசேகரனிடம் 
கொடுத்து  ' ஐயா! உங்கள்  அண்ணன்  உங்களின்  வீட்டுக்குத் தீ வைத்து  உங்களைக் கொல்லப் போகிறார்.  உடனே தப்பிவிடுங்கள்  வழிச் செலவுக்கு  இந்த பணப்  பையை வைத்துக்  கொள்ளுங்கள்  என்று  கூறி   அதை  அளித்தான். 
 

30-3-2020- monday
   குணசேகரன்  மனம்   நெகிழ்ந்து,  '  உன்னைப்போன்ற   உண்மையான  
பணியாளர்  இந்தக்காலத்தில் எங்குமே   கிடையாது.  உன்னிடம்  இருக்கும்  
இந்த  சேமிப்பையும்  என்னிடம்   கொடுத்துவிட்டு,  உன்னுடைய     வயதான  
 காலத்தில்,   நீ   என்ன   செய்வாய்?  நீயும்  என்னுடன்   வந்துவிடு.  ,இத்தனை 
நாள் நீ   என்னை பார்த்துக்கொண்டாய்.  இனிமேல்   நான்  உன்னைப் பார்த்துக் கொள்வேன் .  நாம்  உடனடியாக இந்த  நாட்டை   விட்டு  வெளியேறுவோம்.   என்று  கூறி,   அருகில்  இருந்த  அடர்ந்த  காட்டுக்குள் சென்று  மறைந்தார்கள்.

 --------------------------------
    இதே நேரத்தில்,   ரூபவதியும் ,  மாலதியும்   பேசிக்கொண்டிருந்த போது 
,'ரூபா!  அந்த  இளைஞன் உன்   மனதில்  இடம்  பிடித்துவிட்டான்  போல்
 தோன்றுகிறது.  உண்மைதானா?   ' என்றாள்   மாலதி

.  'அவனுடைய  அப்பா   என்னுடைய  தந்தையின்  உயிர்   நண்பர்   அல்லவா?  இதில் என்ன வியப்பு? ' என்றாள்  ரூபா

 'சமாளிக்காதே!   அவனது  அப்பா   எனது  தந்தையின்   எதிரி   என்பதால், நான் அவனை   வெறுக்கிறேனா ?!'   என்று   கேலி  செய்தாள்   மாலதி.


     இப்படி இந்த   இரு  இளம்  பெண்களும்  இனிமையாகப்  
பேசிக்கொண்டிருந்தபோது ,    மாலதியின்   தகப்பன்   அரசன்   கேசவர்மன்  
கடுகடுத்த   முகத்துடன்,  அங்கு   அவனே  வந்து,  '  இதோ  பார். மாலதி.  
 இன்றே  இப்போதே   உனது   தோழி  ரூபவதி,  இந்த   நாட்டை விட்டு  
 நிரந்தரமாக  .    அகல வேண்டும்.  மறு   பேச்சு  எதுவும்பேசாதே!    அவளை
இனியும்   உன்னுடன்  வைத்திருப்பது   உனக்கு  மிகவும்    கெடுதல்..  
ஊர்க்காரன்   எல்லாரும்,   உன்னைவிட  அவளிடம்தான் 
 மரியாதையும், அன்பும்   கொண்டுள்ளார்கள்.   இது உனது   எதிர்காலத்துக்கு 
கெடுதல்.  எனக்கு இவளைப்    பார்த்தாலே  எரிச்சலாக   இருக்கிறது. நீ   சிறு  
பெண்ணாக இருந்தபோது,  உனக்கு   விளையாட்டுத்  துணையாக  இருப்பாள் என்று    நினைத்து,அவளை  இங்கு   தங்க   அனுமதித்திருந்தேன்.  அது
தவறு என்று   இப்போது   உணர்ந்து    கொண்டேன். '   என்றான்.

    அப்போது  மாலதி   தனது  தந்தையிடம் '  அப்பா!  நான்   நினைவு  தெரியாத சிறு   குழந்தையாக   இருந்தபோதே   ரூபவதி  தனது தந்தையுடன்
காட்டுக்குச்   சென்றிருந்தால், எனக்கு   இவ்வளவு   வருத்தம்   தோன்றாது.   ஆனால்,  பதினைந்து   வருஷங்களுக்கும்    மேலாக,  நாங்கள்  இருவரும்
ஒன்றாக,  உண்டு, ஒன்றாக  ,உறங்கி  ஒன்றாக பேசி  ,ஒன்றாக   விளையாடி  ஒன்றாகவே   வளர்ந்துள்ளோம்  இப்போது  அவளை   பிரிவது, என்   உடலை
இரண்டாக   வெட்டுவதை  விட    மோசமானது.  தயவு செய்து  என்னை  என்  
உயிர்தோழியிடமிருந்து   பிரிக்காதீர்கள் ' என்று   கெஞ்சிக்   கேட்டாள்

 ஆனால்  கேசவர்மன்   மனம்   இரங்கவில்லை /
-------------------       
தனது  கல்நெஞ்சத்   தகப்பன்,  எப்படியும் ரூபவதியை  விரட்டிவிடுவார் என்று    ,நிச்சயமானவுடன் ,  மாலதி   தானும் தனது  உயிர்த்தோழி  ரூபவதியுடன், காட்டுக்குச்  செல்ல  முடிவெடுத்தாள் 

அவசரம்   அவசரமாக   சில உடைகளையும் ,  பணமும்  எடுத்துக்  கொண்டு  
இரவோடிரவாக  அவர்கள்  காட்டுக்கு    யாருக்கும்  தெரியாதபடி  ரகசியமாக.
 கிளம்பினார்கள்  .   ராஜகுமாரிகளின், ஆடை, நகைகளுடன்  சென்றால் ---
 காட்டு  வழியில்  பாதுகாப்பு இருக்காது என்று அவர்கள், மிகவும் எளிய மக்களின் உடை அணிந்து கொள்ள முடிவு செய்தனர்.

  'நாம் இருவருமே பெண்களாக   வெளியே செல்வது சரியாக இருக்காது.  எனவே ஒருவர்   ஆண்  உடையிலும் ஒருவர் பெண்  உடையிலும் சென்றால் நல்லது'  என்றும்  நினைத்தார்கள்.  ரூபவதி சற்று உயரமானவள் .    எனவே  அவள் ஆணாகவும்,  மாலதி  அவளது  தங்கையாகவும்  வேடமிட்டுக்கொண்டார்கள்.   செலவுக்கு  பணமும்  எடுத்துக்கொண்டார்கள்   இத்தகைய  ஏற்பாடுகளுடன்,  அந்த  உயிர்த் தோழிகள் ,  தங்களது   பயணத்தைத்   தொடங்கினார்கள்.

    அவர்கள்  அரண்மனையை  விட்டு  எங்குமே  வெளியே  சென்று பழக்கம் இல்லாதவர்கள்.  முதலில்,  மிகவும்  எளிதாகத் தோன்றிய அவர்களது   காட்டுவழியில் நடை  பயணம்,  சிறிது   நேரம் சென்ற பின்,  மிகவும் கடுமையாக ஆகிவிட்டது.  ஒற்றையடிப்பாதை கூட  இல்லாத அந்த அத்வானக் காட்டில்,   உண்ண   உணவும், குடிக்கத்  தண்ணீரும் இல்லாமல்  தவித்துப் போயினர்.

   நல்ல  வேளையாக  அந்த  வழியில்  ஒரு  ஆடு மேய்க்கும்  சிறுவன்  வந்தான்

'பையா  எங்களுக்கு குடிக்க தண்ணீரும், சாப்பாடும்  தங்க  இடமும்  எங்காவது கிடைக்குமா? ' என்று கேட்டார்கள்.  அவன் .' நான்  ஒரு வேலைக்காரன் தான். எனது எஜமானர் தோட்டத்தில், நீங்கள் தங்க வசதி இருக்கலாம்.  தோட்டத்தை அவர்  விற்கப் போவதாக  பேசிக்கொள்கிறார்க்ள.
என்னுடன்  வாருங்கள் '  என்று கூட்டிச் சென்றான்.  அது மிகவும் சிறிய  பண்ணை வீடுதான். இருந்தாலும்,  மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும்   . எளிய வாழ்க்கைக்கு தேவையான   அனைத்து   வசதிகளும் கொண்டு இருந்தது..  எனவே அவர்கள், அந்த   தோட்டத்தையும், வீட்டையு ம்     வாங்கிக்கொண்டு,ஆனந்தமாக   இருந்தார்கள்.  தங்களை அங்கே கூட்டி  வந்த  சிறுவனையும் வேலைக்கு   வைத்துக்கொண்டார்கள்..
--
.  குணசேகரனும்  தர்மனும்,   காட்டு  வழியில் செல்லும்போது, பசியினால்,  வாடினார்கள்.  தர்மன்  வயோதிகன்    அல்லவா! அவனால்  நடக்கவும் முடியவில்லை.  ' ஐயா!  இனி   என்னால்   ஒரு  அடி  கூட நடக்க முடியாது. என்னை   இங்கேயே விட்டுவிட்டு   நீங்கள்  உங்கள் வழியில் சென்று தப்பிச் செல்லுங்கள்.     கவலைப்படாதீர்கள்.'  என்று   கூறிச்   சரிந்தான்.     குணசேகரன்,  தர்மனை  ஒரு      மரத்தடியில்  அமர வைத்துவிட்டு  எங்காவது  உதவி  கிடைக்கிறதா என்று காண  காட்டு  வழியில்  தேடிச்   சென்றான்.

   அப்போது,  ஒரு   பெரிய  மரத்தடியில் , ஆட்கள்  பேசுவதும், பாடுவதும் கேட்டது.  அங்கே  சென்று  பார்த்தபோது,  கூட்டமாக  பலர்  தரையில் அமர்ந்து உணவு  அருந்தத்   தயாராக  இருந்தனர்.  உடனே   குணசேகரன்  தனது  வாளை    உருவிக்கொண்டு,  'ஜாக்கிரதை.  எனக்கும்  எனது  வயோதிக  நண்பனுக்கும்  மிகவும்  அவசரமாக  உணவு  தேவைப்  படுகிறது.  தராவிட்டால்,  நானே  எடுத்துக் கொள்வேன்.'  என்று மிரட்டினான்.


      அங்கு  இருந்தவர்கள்,  அரசன்  மித்ரவர்மனும்,  அவனுடன்  வந்திருந்த  உயர்குலப்   பிரபுக்களும்  என்று  அப்போது  குணசேகரன்  அறிந்திருக்கவில்லை.   மித்ரவர்மன்  மிகவும்  அமைதியாக ,  'இளைஞனே   நீயும்  உனது  வயோதிக நண்பரும்  இங்கு  வந்து   எங்களுடன் சேர்ந்து  உணவருந்துங்கள்.  இதற்கெதற்கு  இவ்வளவு  கோபமும் மிரட்டலும்.?'
என்றார்.

 குணசேகரனுக்கு  மிகவும்  வெட்கமாகி விட்டது.  'மன்னியுங்கள்.  இது  காட்டுப் புறம் என்பதால்,  நான்  உங்களைத்   தவறாக நினைத்துப் பேசிவிட்டேன்.   இதோ  எனது  வயோதிக  நண்பரை  இங்கு  கொண்டு வருகிறேன்.  எங்களை மன்னித்துக்   காப்பற்றுங்கள்'   என்று  கூறி,  தர்மனைத் தனது  தோளில்   சுமந்து,  அந்த  இடத்திற்கு  கூட்டிவந்து  உணவருந்தி,  ஓய்வெடுத்து  மித்ரவர்மனின்  குழுவில்  ஒருவனாக  சேர்ந்துவிட்டான்

  பிறகு  அரசர் மித்ரவர்மன், அந்த    இளைஞன் குணசேகரனைப் பற்றி  விசாரித்தார்.  அவன் தனது  இனிய நண்பன்  வஜ்ராங்கனின்  மகன் என்று  அறிந்து மிகவும் மகிழ்ந்து, இனி நீயும் எங்களுடன் என்றும் இருந்தால் எங்களுக்கு மிகவும்  மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறினார்.-----------------------
2-4-2020

இவ்வாறு சில இனிமையான நாட்கள் சென்றன.  காட்டில், சுற்றித்  திரிந்த போது   அங்கிருந்த பல மரங்களில் யாரோ ஒருவன் 'ரூபாவ தி'- ரூபாவ த்' என்று  பெயரைச் செதுக்கி வைத்திருந்ததை கண்டார்கள்.  அது மட்டுமின்றி, பல மலர்க்கொடிகளில்,  ரூபவதி  பற்றிய  இனிய  கவிதைகளும்  தொங்கவிடப் பட்டிருந்தன.  குணசேகரன் தான்  இவ்வாறு  செய்திருப்பான் என்று  ரூபவ திக்கு நிச்சயம் ஆகிவிட்டது.  அவனும்  இதே காட்டில்  இருப்பது  அவளுக்கு  மிகவும்  ஆனந்தமாகிவிட்டது.  அவனைத் தேடித் திரிகையில்  அவன் ஒரு  மரத்தடியில், அமர்ந்து   எதையோ நினைத்து  ஏங்கி கொண்டிருந்ததைக்  கண்டார்கள்.  குணசேகரனின்  கழுத்தில்,  ரூபவதி  அவனுக்குப்  பரிசாகத்  தந்திருந்த  பொன்மாலையும்  இருந்தது.

     
  ரூபவதி    ( தனது  ஆண்  வேடத்தில்),       அவனுக்கும்  கேட்கும்படியாக'
'யாரோ  ஒருவன்  ரூபவதி  என்ற பெண்ணைப் பற்றி பைத்தியமாக  இங்கு உலவிக்கொண்டு, இந்த அழகான காட்டின் மரங்களைச் செதுக்கியும் அவனது பிதற்றல்   கவிதைகளைத்  தொங்க  விட்டு  மலர்க்கொடிகளையும்   நாசம் செய்கிறான். அவனைப்பார்த்து  எச்சரிக்க வேண்டும்'   என்று  தனது தங்கை மாலதியிடம் கூறினாள் .

 அதைக் கேட்ட  குணசேகரன்,  'நான்தான்  அந்தக் குற்றவாளி.  ரூபவதி  எனது  ப்ரேமராணி. நீங்கள் அவளைப்பார்த்ததில்லை. பார்த்தால்  எனது பைத்தியத்தின் காரணம் உங்களுக்கு எளிதில் விளங்கும். நீங்கள் யார்'  என்று கேட்டான்.

 ரூபவதி '  என் பெயர்  வனராஜன்   இவள்  என் தங்கை  யுவராணி.  இந்தக்  ப்ரேமம் இதிலெல்லாம் எனக்கு  நம்பிக்கை கிடையாது.  உங்களின்\ இந்தப் பைத்தியத்தை    என்னால் வெகு எளிதாக  குணப்படுத்த முடியும்.'  என்றாள்

'அப்படியா?  அதற்கு  நான்  என்ன செய்யவேண்டும்?  என்று  அவன் கேட்டான்.

' ஒன்றும் கடினமில்லை.   உங்களுக்கு  இந்தப் பெண்கள்  எவ்வளவு  கொடிய   மனத்தவர்கள் என்று  புரிய வைப்பேன்.  என்னை   உங்களது  இதய ராணி  ரூபவதி என்று  கற்பனை செய்துகொண்டு நீங்கள் என்னிடம் பேசினால், நான் ஏட்டிக்குப் போட்டியாக  எதாவது சொல்லி  உங்களுக்கு  ரூபவதி  மேல் மட்டுமல்ல, இந்த  பிரேம  விஷயங்கள் முழுவதும் பற்றி வெறுப்பு தோன்றத் செய்வேன்.  சரிதானே.  நீங்கள் எனது வீட்டிற்கு தினமும் வரவேண்டியது. உங்களது  பிரேமப்  பிரசங்கத்தை  ஒப்புவிக்க வேண்டியது. நான்  அதை  கேலி செய்து  எரிச்சலைக் கிளப்பி உங்களை  குணப்படுத்துவேன் என்றாள் .'


      தன்னுடன் இவ்வாறு கேலியாகப் பேசும் யுவன்,  ரூபவதி என்று குணசேகரன் அறியவில்லை. இருந்தாலும், அவனது உருவம்  ரூபவதி போல இருந்ததால், குணசேகரன் இவ்வாறு தினமும்  அந்தக் குடிசைக்குச் சென்று வனராஜனிடம்  அவனை  ருபவதியாக  கற்பனை செய்துகொண்டு, பிரேம வசனங்கள்  பேசுவது,ம் , அதற்கு வன ராஜன், இடக்காக  பதில் கூறி கிண்டல் செய்வதும்  வாடிக்கையாக  நடந்து வந்தது. ( உள்ளூர,   வனராஜன் என்ற ரூபாவுக்கு , குணசேகரனின்  பிரேம வசனம்  அமிர்தம் போல இனித்தது!)

   ஒரு நாள்,  ரூபாவும், மாலதியும், காட்டு வழியில், சென்றபோது,  அரசரும்  அவரது குழுவும் எதேச்சயாக  எதிரே வர நேர்ந்தது.  பலப்பல  ஆண்டுகளுக்குப்பின்  தனது தந்தையைக் கண்டத்தில், ரூபவதி  மிகவும் மகிழ்ச்சி கொண்டாள்  விளையாட்டுப்பெண் அல்லவா  . அரசர்  அவளிடம்  ' பையா  உன் பெயர் என்ன , உன் குடும்பப் பின்புலம் என்ன'  என்று கேட்டபோது  அவள் ' தங்களைப் போலவே குடும்பம் தான் எனதும் ' என்று கூறினாள்   அரசரும்  அதைப்  பெரிது  செய்யவில்லை. ' நானும்  இப்போது காட்டுவாசி, இவனும் அவனது தங்கையும் காட்டுவாசிகள்   அவன் கூறுவது சரிதானே 'என்று சிரித்துக் கொண்டு  போய்விட்டார்.

       ஒரு நாள்,  குணசேகரன்  காட்டு வழியில்,  வனராஜன்   தோட்டத்திற்கு வரும்  வழியில், ஒரு மரத்தின்  அடியில்,  ஒரு  இளைஞன் ஆழ்ந்து  உறங்குவதைக் கண்டான்.  அந்த இளைஞன் நகர்ப்புர ஆடையில் இருந்தான். அதனால்,  அவன் யாராக இருக்கும் என்று  அறிய  சற்று அருகே  சென்று  பார்த்த்போது,   தன்னை  இந்த பரிதாப நிலைக்கு ஆளாக்கிய தனது  அண்ணன்   லோபசேகரனைக் கண்டான். அந்த இளைஞனை, ஒரு  கொடிய விஷப் பாம்பு,  கடிக்க வந்ததைக் கண்டு, அந்தப் பாம்பை தனது வாளால்   விரட்டி    அவனைக் காப்பாற்றினான்.  அதே நேரத்தில்,  ஒரு சிங்கமும்   அங்கு காத்திருந்து அவனைக்  கொல்ல இருந்தது.  அந்தப் சிங்கத்தோடும்   சண்டை போட்டு  அதையும் கொன்றுவிட்டான்

.  பிறகுதான், அந்த இளைஞன் விழித்தெழுந்து  நின்றான்.  தான் எவ்வளவோ கெடுதல் செய்திருந்தாலும், அவை எல்லாவற்றையும் மறந்து  தன்னைக் காப்பாற்றிய  தன து  இளைய சகோதரனை  அந்த நிமிடத்திலேயே  தன்னைவிட  அற்புதமானவன் என்று உணர்ந்து,  லோப சேகரன்  , முற்றிலும் மனம் மாறி, தான் கடந்த காலத்தில்  செய்த தவறுகள் அனைத்திற்கும்
தனது தம்பியிடம் மன்னிப்பு கேட்டான்.  குணசேகரனும் அவனை மனமார மன்னித்து  சமாதானம் ஆகிவிட்டான்.
   
      சிங்கத்திடம்  சண்டை போட்டதில், குணசேகரனுக்குக்  காயம்  ஆகிவிட்டது.  தனக்காக  வனராஜன் காத்திருப்பான் என்று   கவலைப்பட்டு,   அண்ணன்  லோபசேகரனை,  ரத்தம்  தோய்ந்த துணியை தந்து
சாட்சியாக வைத்து,  தோட்டத்திற்கு அனுப்பிவைத்தான்.  அங்கு சென்று  நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும்  லோபசேகரன் , ரூபவதிக்கும், மாலதிக்கும் கூறினான்.  தான்  குணசேகரனின் அண்ணன்  லோபசேகரன் என்றும்,  செய்த தவறுகள் அனைத்திற்கும் மிகவும் வெட்கமும், வேதனையும்   அடைந்துள்ள ஒரு புதிய மனிதன் என்று  அவர்களிடமும் மன்னிப்பு கோரினான்.  இவ்வாறு,  மனம் மாறிய  குணசேகரனின்  அண்ணன் மீது  மாலதிக்கு மிகவும் பிரியம் உண்டாகிவிட்டது. ஆனால்  ரூபா,  குணசேகரனுக்கு  காயம்  என்று கேட்ட மாத்திரத்திலே  மயக்கம் அடைந்து விட்டாள்  இருந்தாலும்  ஆண்  வேடத்தில் இருந்ததால் சமாளித்துக்கொண்டு, நான் ஒன்றும்  மயக்கம்  அடையவில்லை.  சும்மா  நடித்தேன் என்று தைரியசாலிபோல நடித்தாள் .
----------------------------------------------------------.
3-4-2020

 வெகு நேரம் கழித்து,  குணசேகரனின் அண்ணன் , திரும்பி வந்து, தோட்டத்தில் நடந்த அனைத்து விஷயங்களையும் அவனிடம் கூறினான். கூடவே,  வனராஜன் மயங்கி விழுந்ததையும்  கூறி, வனராஜனின் தங்கை,  யுவராணி தனது மனதைக் கவர்ந்துவிட்டாள்  எனவும், தான்  அவளைத் திருமணம் செய்துகொண்டு,  இந்தக் காட்டுத்   தோட்டக்   குடிசையிலேயே  தானும் ஒரு  இடையனாக வாழ முடிவெடுத்துள்ளதாகக் கூறி,  குணசேகரன்  உதயபுர  ராஜ்ய  நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ள  வேண்டும் என்றும் கூறினான்.

 குணசேகரன்  தனது அண்ணனின் ஆசையை அங்கீகரித்து, 'நாளையே உனது திருமணத்தை  நமது  அரசர் மித்ரவர்மன்  மற்றும்  அவரது அரசவைக் கோமான்கள் முன்னிலையில் கோலாகலமாக  நடத்திவிடுவோம்.  ராஜ்ய  விஷயங்கள் எல்லாம்  பிறகு பார்த்துக் கொள்வோம்.  வா நாம் உடனே  மன்னரிடம் சென்று இந்த  நல்ல செய்தியைச் சொல்லி அவரது ஆசியைப்  பெறுவோம்'   என்று  கூறி  அவ்வாறே  அனுமதி பெற்றார்கள்.

      சற்று நேரத்தில்,  ரூபாவும், மாலதியும்  ,வழக்கமாக  குணசேகரன்  தங்கும் மரத்தடிக்கு வந்தார்கள்.  லோபசேகரனும், மாலதியும் ( யுவராணி)  திருமண விஷயம் பற்றி  இன்பமுடன் பேசி மகிழ தனியே சென்று விட்டார்கள்.  அப்போது,  குணசேகரன்,  ரூபவதியிடம்  '  எனது அண்ணனின்  திருமணம் நாளை நடக்க உள்ளது     நாளையே  எனக்கும்  ரூபாவுக்கும்  திருமணம் நடந்தால் எவ்வளவு அருமையாக  இருக்கும். ! ஆனால்  எனக்கு அந்தக் கொடுப்பினை இல்லை'   என்று தனது வருத்தத்தை,  வனராஜனிடம் கூறினான்.

  ' நீ  உண்மையிலேயே  ரூபாவைத் திருமணம் செய்து கொள்ள  விரும்பினால்,  என்னால்  அவளை இங்கே கொண்டுவந்து உன்னுடன் சேர்த்து வைக்க முடியும்.'  என்றான் வனராஜன். 

  'அதெப்படி முடியும் '

  ' அதைப்பற்றி உனக்கென்ன ?   எனது பாட்டனார், ஒரு  மந்திரவாதி.  எனக்கு  அவர்  பல  ரகசிய  மந்திரங்களை சொல்லிக் கொடுத்துள்ளார்.  ஆனால்,  நம்பிக்கை   இல்லாதவர்களுக்கு அந்த மந்திரங்கள்  சற்றும் பலனளிக்காது.  உனக்கு  நம்பிக்கை இருக்கிறதா ?   நேர்மையாக  நீ அந்தப் பெண்ணைத்  திருமணம்  செய்து கொள்வாயா?  'என்று கேட்டான் வனராஜன்.

  'இதென்ன கேள்வி?    இத்தனை நாள்  என்னுடன்  பழகிய  பின்னும் ரூபவதியின் மீது   நான் உயிரையே வைத்திருக்கிறேன்  என்று  உனக்குத்  தெரியவில்லையா?   அவளோ ஒரு  ராஜகுமாரி.  இங்கே எங்கு இருக்கிறாள்? நீலாம்புர  ராஜ்ய அரண்மனையில் அல்லவா இருக்கிறாள்!   அவளை நாளைக்கு காலையில்  எப்படி  இங்கே  வரச் செய்ய முடியும்  ? ' என்று ஐயப்பட்டான் குணசேகரன்

'    இவ்வளவுதானா உன் நம்பிக்கை ?  மந்திர சாஸ்திரத்தினால்  ஆகாதது  எதுவுமே  இல்லை.!  ஒருவேளை, இது நடக்காமல் போனால்,  அது  உனது  நம்பிக்கை இல்லாத  மனத்தால் மட்டுமே  !. அது  உன் தவறு.! !மந்திர சாஸ்திரத்தின் தவறு அல்ல.!   இப்போது  முடிவாகச் சொல்!.  நேரம் போய்க்கொண்டே  இருக்கிறது.'  என்று  மிரட்டினான்  வனராஜன்


 '  சரியப்பா ! நீ சொல்லும்படியே  செய்கிறேன்.  இப்போது  என்ன  செய்யவேண்டும் என்று சொல்'  என்றான்  குணசேகரன்.

 ' நீ இப்போதே  உனது  அரசர்  மித்ரவர்மனிடம் என்னைக் கூட்டிச் சென்று,  நான்  கூறிய  அனைத்தையும்  கூறி, அவரது  அனுமதி பெற ஏற்பாடு செய்.'  என்றான் வனராஜன்.
 
       அவ்வாறே  குணசேகரன்,  வனராஜனை  மன்னரிடம்  கூட்டிச் சென்றான்.
அப்போது  வனராஜன்,  'அரசே . எனது  மந்திர  சாஸ்த்ரத்தால்,  தங்களது  குமாரி  ரூபவதியை  இங்கு  நான்  கொண்டுவந்தால்,  அவளை எனது நண்பன்  குணசேகரனுக்குத் திருமணம்  செய்து  வைக்க தாங்கள்  அனுமதிப்பீர்களா? என்று  கேட்டான்.

அதற்கு,  அரசர் மித்ரவர்மன், ' இதில் என்ன தயக்கம்? என் மகளுக்குப் பிடித்தம் என்றால் எனக்கும் பிடித்தம் தான்.  குணசேகரன் எனது ஆருயிர் நண்பன்  வஜ்ராங்கனின்  மகன் அல்லவா!  குணசேகரனும்  மாபெரும் வீரன்  அல்லவா!  எனக்கு பூர்ண  சம்மதம். நீ  இப்போது  என் மகளைக் கொண்டுவந்து  எங்கள் அனைவரையும்  மகிழ்விப்பாய்!'    என்று  வேண்டினார்.

  இப்போது,  வனராஜன், குணசேகரனிடம், " நண்பா! நான்  உனது ப்ரேமராணி  ரூபவதியை   இங்கே தோன்றச்   செய்வேன்.  அவளைத்  திருமணம் செய்துகொள்வதாக   உறுதி கொடு '  என்றான்.  அவனும், ' '
'எத்தனை  தடவை  வேண்டுமானாலும் உறுதி தருகிறேன். என்னிடம் ராஜ்ஜியம் எதுவும் இல்லை. எனது மனோ ராஜ்ஜியம் தவிர.!    எனது சர்வமும், ரூபவதியின்   உடமை தான்."  என்று சபை அறிய  கூறினான்.

     "நல்லது.  நானும், எனது  தங்கை  யுவராணியும்,  இப்போது  சற்று வெளியே சென்று விட்டு  மந்திரங்களை  உச்சரிக்கவேண்டும்.  அனுமதி  தாருங்கள்."
  என்றான்  வனராஜன்.

    அவர்கள்  இருவரும்  சென்றபின்னர்,  அரசர்,  மிதரவர்மன், ' இந்தப் பையன்  வனராஜன் எனது பெண் ரூபாவின் முகச் சாயலில்  உள்ளான்.  அதனால் தான்  எனக்கு  அவனை  பிடித்திருக்கிறது.    என்னதான்  நடக்கிறது என்று பார்ப்போம்'   என்றார்.

குணசேகரனும்   அதை ஆமோதித்து,  'நானும்  அதனால்தான், அவனிடம் மிகுந்த நட்பு கொண்டுவிட்டேன்.   சற்று   விளையாட்டுப் பையன்.  இருந்தாலும்,  இவ்வளவு  முக்கியமான  விஷயத்தில் நம்மை ஏமாற்ற மாட்டான் என்று நம்புகிறேன்' . என்று, துடிதுடிக்கும் இதயத்தோடு, காத்திருந்தான்.
 
         அதிசயம் ! அதிசயம் !அதிசயம். !  திடீரென்று,  ரூபவதியும் , மாலதியும் ,  தங்களது,  அரண்மனை  ஆடை  ஆபரணங்களுடன்,  அந்த  காட்டு  குகை வாயிலில்,  தேவலோக  கன்னிகைகள்  போன்று  ஒளிவட்டத்தில்  தோன்றி,  அனைவரையும்,  ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தினா.

 இனிமேலும்,  விளையாடுவது,  சரியல்ல என்று  தீர்மானித்து,  ரூபா,   தனது  தந்தை  மித்ரவர்மனின்  பாதம்  பணிந்து,  உண்மை  அனைத்தையும்  கூறி  ஆசி வேண்டினாள்.  அதுபோலவே,  மாலதியும தனது  பெரிய  தகப்பனார்  மித்ரவர்மனின் காலடியில் பணிந்து  மன்னிப்பும், ஆசியும் வேண்டினாள்.
         
      எங்கும்  ஒரே  குதூகலம்.!  ஆரவாரம்,! ஆட்டம் பாட்டம்  .!    இவற்றின் நடுவில்,  குணசேகரன்- ரூபவதி யின் திருமணமும், அதே போல  லோபசேகரன்-மாலதி திருமணமும்  இனிதே  நிறைவேறின.

       திடீரென்று,  அங்கு  நீலாம்பூர் ராஜ்ய  தளபதி, ராணுவ  வாத்திய  முழக்க அறிவிப்புடன், அங்கு  தோன்றினான்.  மித்ரவர்மனுக்கு  ஒரு  முக்கிய செய்தி கொண்டுவந்திருப்பதாக கூறினான்.  அரசவை  வீர்ர்கள் அனைவரும், உடனே தங்களது வாளை உருவிக்கொண்டு  போருக்குத்  தயாராகினர்.  ஆனால் அந்த ராணுவ தளபதி  மித்ரவர்மனிடம் சென்று, பணிந்து,  "கேசவர்மன்  துறவறம்  பூண்டுவிட்டார்,   எனவே, மித்ரவர்மனும், அவரது ஆதரவாளப்   பிரபுக்களும்,உடனேயே   நீலாம்பூர்  ராஜ்யத்திற்குத் திரும்பி,  அரசாங்க  பொறுப்பை  ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வேண்டினான்.

        ' என்ன நடந்தது ? ஏன்  இந்த  திடீர் மனமாற்றம்?  '  என்று  மித்திரவர்மன்  கேட்டபோது, அந்த தளபதி, 'அரசே . வீரமும், தீரமும் , விவேகமும் மிக்க  நீலாம்புர  ராஜ்ய  கோமான்களும், இளைஞர்களும், தங்களுடன் இணைந்து விட்டதால், மிகவும் கோபம் கொண்டு, கேசவர்மன், ஒரு பெரும் படையுடன், காட்டில்  படையெடுத்து, உங்கள்  எல்லோரையும் பழி தீர்க்கக் கிளம்பினார் .  வரும்  வழியில்,  சத்யானந்தர்   என்ற  துறவி, அவரிடம் பேசி  ஞான உபதேசம்  செய்து, மனதை மாற்றி விட்டார். உடனே  கேசவர்மன்  ஒரு துறவியாக மாறி, அந்த மடத்திலேயே தங்கிவிட்டு, தன்னை மன்னித்து  ராஜ்ய அதிகாரத்தை   முன்போலவே தாங்கள்  ஏற்று  அருள வேண்டும் என்ற செய்தியைச் சொல்லி என்னை  அனுப்பியுள்ளார்.  இனி தாங்கள்தான் எனக்கும் எனது படை வீரர்ககளுக்கும் அரசர்.  இது அவ்வளவும் உண்மை." என்றான்.
 
        இவ்வாறு,  தீமைகள்  அனைத்தும்  அகன்று  எங்கும்  நன்மைகளே  வென்று நிலைத்து,  நீலாம்புர  ராஜ்ஜியம் மீண்டும் ஒரு  பூலோக  ஸ்வர்கமாக   மாறியது.
 
                நாமும்  திருமண   விழாவில்  பங்கேற்று  அகமகிழ்வோம்.

                                                             சுபம். 


=======================================================================
DUKE        மித்ரவர்மன் 
DUKE'S BROTHER-FREDERICK  கேச வர்மன் 
DUKE'S DAUGHTER -ROSALIND      ரூபவதி 
DUKE'S BROTHER'S DAUGHTER-CELIA மாலதி 
ORLANDO குணசேகரன் 
Sir Rowland de Boys வஜ்ராங்கன் 
Ganymede வனராஜன் 
Aliena. யுவராணி 
Oliver  லோபசேகரன் 
ADAM தர்மன் 

Popular posts from this blog

MERCHANT OF VENICE ( in THAMIZH)

                                                        MERCHANT OF  VENICE                                                PLAY  BY  SHAKESPEARE  ( 1600) TALE     RETOLD    BY  MARY  LAMB ( 1800) ( Tales  from Shakespeare) Adaptation/ Translation  in Thamizh  (   தமிழ் ) by RSR =============================== This  is  the  tenth  tale   in the  proposed  10  tales. ------------------------------------------------------ ------------------------------------------------ INDEX TO THE OTHER TALES  IN THAMIZH AT https://shakespeare4tamils.blogspot.com/p/index-page.html original play by the BARD http://www.opensourceshakespeare.com/views/plays/plays.php http://www.opensourceshakespeare.com/views/plays/playmenu.php?WorkID=merchantvenice ------------------------------------------- The  original  text  of  the  tale by Mary Lamb  is at https://comediesmarylamb.blogspot.com/2020/02/merchant-of-venice.html?view=flipcard ------------------------------------------------- Name

ALL IS WELL THAT ENDS WELL

                     ALL'S  WELL THAT  ENDS WELL PLAY  BY  SHAKESPEARE  ( 1600) RETOLD  BY MARY LAMB  (1800) ADAPTED AND TRANSLATED  BY  RSR IN THAMIZH ========================================= COPY RIGHT  MATERIAL. ========================================== https://comediesmarylamb.blogspot.com/2020/03/alls-well-that-ends-well.html?view=flipcard                                                நல்லதே  வெல்லும் விதேஹ   நாட்டின்   மன்னன் , கீர்த்திசேகரன்..    தனது ஆருயிர்   நண்பன் ஜெயதேவன்   எதிர்பாராத விதமாக   இளம் வயதிலேயே   பிரிந்து விட்டதை   நினைத்து ,,   ஜெயதேவனின்   மகனை அரசவைக்குக் கொண்டு    வந்து   அங்கு ஒரு    முக்கிய   பதவியில்   அமர்த்த நினைத்து ,    அவனை   அழைத்து    வர , மிகவும்   அனுபவமிக்க , பண்பாளன் , கோமான்    சுதர்சனசேனனை பிரயாகை   நகருக்கு அனுப்பி     வைத்தான்.       ஜெயதேவனின்    மகன் பெயர்    விக்ரமசேனன்..   நல்லவன் தான்   .   எனினும் தனது    உயர்குலப்   பெருமை பற்றி   சற்று    கர்வம்    கொண்டவன்..   அவன் அன்னையின்   பெயர்   அனசூ