Skip to main content

PERICLES- PRINCE OF TYRE

-----------------------------------
PERICLES  BY  SHAKESPEARE  (1610)
RETOLD  BY  MARY LAMB        (1800)
ADAPTATION AND  TRANSLATION IN TAMIL -BY  RSR
-----------------------------------------------------------------
 begun  on 6-3-2020
completed  on   10-3-2020
----------------------------
INDEX  TO   POSTS  HERE   .>  https://shakespeare4tamils.blogspot.com/p/index-page.html

original english text at

https://comediesmarylamb.blogspot.com/2020/02/pericles.html?view=flipcard




                            திவ்யவர்மன்   மகள்
 


6-3-2020
    ஒரு  காலத்தில்,  தக்கனப் பேரரசின் சக்கரவர்த்தியாக  வக்ரசித்தன்  என்ற கொடுங்கோலன்  ஆட்சி நடந்து வந்தது . கள்ளத்தனமாக ,அவன்  கொலை,கொள்ளை, தகாத    உறவு  போன்ற   பல  இழிவான  செயல்கள் புரிந்து  வந்தான். ஆனால்,  வெளி உலகுக்கு  பெரும்  உத்தமன் போல   நடித்து வந்தான்.
 அவனது  சாம்ராஜயத்தின் ஒரு   கடல்ஓரத்தில்,   மங்களபுரம் என்ற ஒரு  சிறிய  நாட்டின்  சிற்றரசனாக திவ்யவர்மன்  என்ற   நேர்மையான  வீரன் ஆண்டு வந்தான். ஒரு  சமயம்,  வக்ரசித்தன்     செய்த   கீழ்த்தரமான செயலை ,திவ்யவர்மன் கண்டு பிடித்து  விட்டான்.. திவ்யவர்மனுக்கு   தனது   ரகசியம் தெரிந்து   விட்டதில்,  வக்ரசித்தனுக்கு கடும்  ஆத்திரம். . ஏதாவது  காரணம்  சொல்லி திவ்யவர்மன்க்  கொல்வதற்கு ரகசியமாகத்  திட்டம் போட்டுக்  கொண்டிருந்தான். திவ்யவர்மனுக்கு   அது பற்றி தெரிய   வந்ததும்  , அவன்  தனது    மந்திரி  குணசீலனிடம்   நிலைமையை  ,விளக்கி  ' நான்  இங்கு  இருந்தால்,அந்த      வக்ரசித்தன் ,  நமது நாட்டின்  மீது  படையெடுத்து   வந்து நமது  ஜனங்களைக் கொடுமைப படுத்துவான்.   எனவே நான்   சில  காலம்  வேறு நாடு    எதிலாவது  போய்  வசிக்கிறேன்.   வக்ரசித்தன் காலம் முடிந்த   பிறகு எனக்குத்  தகவல்  அனுப்பு.  அப்போது நான்  திரும்ப  வந்து   நிர்வாகத்தை ஏற்றுக் கொள்கிறேன்.   அதுவரை  நீயே நமது  ராஜ்யத்தையும்,  மக்களையும்  நல்ல  படியாக கவனித்துக்  கொள் "   என்று கூறி, ஒரு   பெரிய கப்பலில்,   நெடு நாட்களுக்குத்   தேவைப்படும்  உணவுப் பொருட்கள், மற்றும்  பலவற்றுடன், தனது  கடல்  பிரயாணத்தை   தொடங்கினான்.
      அந்தப்  பகுதி  முழுவதும் , பல   சின்னஞ்சிறு  தீவுகள்  நிறைந்த கடல்.!     அடிக்கடி  புயலும்   சூறாவளியும்  வீசும் பகுதி!  .   சில  தீவுகள்  செழிப்பு மிகுந்தவை.  பல   தீவுகளில் செழிப்பும்  பஞ்சமும்  மாறி மாறி  வருவதும் உண்டு. 
      மத்ஸ்யத்வீபம் என்று ஒரு   தீவுநாட்டில்,  அப்போது   மிகவும் கடுமையான  பஞ்சம் நிலவி வந்தது.  அது  பற்றி  திவ்யவர்மன்   கேள்வியுற்றதும்,  தனது   கப்பலை அந்த   நாட்டிற்கு  கொண்டு  சென்று தனது   கப்பலில்  இருந்த தானியங்களை   ,  அந்த   தீவின்  மக்களுக்கு  இலவசமாக  விநியோகம் செய்தான்.  பஞ்சத்தில்   வாடிவந்த அந்த  எளிய   மக்கள் , திவ்யவர்மனை  தெய்வம்   அனுப்பிய  தூதனாகப் போற்றி வணங்கினர்.  அந்த  தீவின்  தலைவன்  , சத்யேந்திரன்,    திவ்யவர்மன் மீது   மிகுந்த நன்றியும்  அன்பும்  கொண்டு   போற்றினான்..
, ஒரு  சில  நாட்கள்   சென்ற பின்னர்,  குணசீலனிடமிருந்து ,திவ்யவர்மன்க்கு  ஒரு  தகவல்  வந்தது.  அதில்,  திவ்யவர்மன்   மத்ஸ்யத்வீபத்தில்   தங்கி   இருப்பது,, வக்ரசித்தனுக்கு தெரிந்து  போய்  விட்டது   என்றும், திவ்யவர்மனைக்  கொல்ல  அவன்   ஆட்களை  அனுப்பியுள்ளான் என்றும் இருந்தது.  எனவே  ,திவ்யவர்மன்   மீண்டும்  தனது  கப்பல்   பயணத்தை   தொடர்ந்தான்.
=================================================================================
3
   பயணத்தின்  போது எதிர்பாராமல்,  ஒரு  பெரும்  சூறாவளி   வீசியது. கப்பலில்  இருந்த     அனைவரும் கடலில்  மூழ்கி  இறந்து விட்டனர்.  திவ்யவர்மன்   மட்டும் எப்படியோ பிழைத்துக் கொண்டான்.  ஆனால்  அந்தக்   கொந்தளித்த கடல்,  அவனை   ஆடையில்லா  அலங்கோலமாக ஒரு  கடல்   கரையில் கொண்டு  தள்ளி விட்டது,  அவனைச்  சில    மீனவர்கள், அனுதாபத்துடன்    அவர்களின்  குப்பத்திற்கு   கூட்டிச்  சென்று ஆடையும், உணவும்   அளித்துக் காப்பாற்றினர்.   
பேசிக்  கொண்டிருந்த போது   அவர்களின்  நாட்டின்   பெயர்  சுபதீபம் என்று    சொன்னார்கள். நாட்டின்   அரசன் பெயர்   கருணாசாகரன் என்றும்,  அவர்  மிகவும்   நல்லவர்,  கருணை   மிக்கவர்,  நியாயவான் என்றும்   அந்த   மீனவர்கள்,   பெருமையுடன் கூறினார்கள் .   அரசனுக்கு  ஒரே ஒரு   அழகு  மகள்  என்றும்   அவளது பெயர் சுபத்திராதேவி என்றும், ‘ அடுத்த  நாளில்  அரசகுமாரி சுபத்திராதேவியின்   ,பிறந்த நாள்   கொண்டாட்டம்    விமரிசையாக நடைபெறும், அப்போது  பல  நாட்டு   வீரர்களும்,   போட்டியிட்டு    அவர்களது  திறமையை  காட்டுவார்கள் என்றும்  மீனவர்கள்  தெரிவித்தனர். 
திவ்யவர்மனுக்கு , தான் அந்தப்  போட்டியில்  கலந்து கொள்ள  முடியாதது பற்றி  மிகவும்    வருத்தம்.  ஏனெனில்,  கடல்   விபத்தில், அவனது  வாளும்   கவசமும் தொலைந்து    போய்விட்டன..  அந்த    நேரத்தில், அங்கு ஒரு  மீனவன்  வந்துதனது   வலையில்  ஒரு  வாளும்  ,  கவச உடையும்  சிக்கியது என்று கூறி அவற்றை   ஒப்படைத்தான்., திவ்யவர்மனுக்கு  மிகவும்   உற்சாகம் தோன்றியது.  ' இந்த   வெற்றி வாளும், நெஞ்சக கவசமும்  ,  எனது வீரத்  தந்தை  எனக்குப் பரிசாக கொடுத்தவை!  போற்றிப்   பாதுகாத்து   வந்துள்ளேன்.  நாளை   நடக்கும் போட்டியில்  கலந்து  கொண்டு  வெற்றி   பெறவே கடல்   அன்னை , எனக்குத்   தகுந்த நேரத்தில்,  அவற்றை  திரும்ப    அளித்து  எனக்கு   ஆசி   அளித்துள்ளாள். என  மனம்  மகிழ்ந்தான்.  
---------------------
4     
அடுத்த   நாளில்,  ,திவ்யவர்மன் , அரசகுமாரியின்  பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்று ,  வீரர்களுக்கான  அனைத்து  போட்டிகளிலும் வெற்றி வாகை  சூடினான்.. போட்டிகளின்   முடிவில், ராஜகுமாரி  சுபத்திராதேவி,,  , திவ்யவர்மன்  சிரசில்,  வெற்றி மகுடம்  வைத்து சிறப்பித்தாள்  மற்ற  வீரர்கள் அனைவரையும்  வரிசையாக  சிறு பரிசுகள் கொடுத்து அனுப்பி  விட்டாள் .   அந்தக்    காலத்தில்,  இவ்வர்று உயிரைப் பணயம் வைத்து சாகசப் போட்டிகளில்  வெற்றி   பெறும்   வீரனுக்கு,  ராஜகுமாரியை மணம்   முடிப்பது   வழக்கம்.. அதற்கேற்ப  மன்னன்  கருணாசாகரன்,  தனது  மகளின்  மனதைப்   புரிந்து  கொண்டு ,   திவ்யவர்மனுக்கு அவளை  விவாஹம்  செய்து  கொடுத்தான்.,   சுபத்திராவை   பார்த்த  உடனேயே திவ்யவர்மனுக்கு   அவளைப்  பிடித்துவிட்டது.. திவ்யவர்மன்   அரசனிடம்   தானும்  ஒரு அரசன்  என்று   கூறவில்லை.   அதனால்,  அரசனுக்கு தனது   செல்வ மகளை ஒரு     சாமான்ய வீரனுக்கு மணம் முடிப்பதில்  சற்று  தயக்கம்  இருந்தது .    ஆயினும், தனது    மருமகன், தனது   அரண்மனையிலேயே தனது   மகளுடன்  இருப்பான்   என்பதில்  அவனுக்கு  மகிழ்ச்சிதான்..
6
இவ்வாறு   சில  மாதங்கள் இன்பமாகக் சென்றபின்னர் , ஒரு  நாள், திவ்யவர்மன்னின்   மந்திரி குணசீலனிடம்  இருந்து ஒரு   கடிதம் வந்தது. "  " அரசே!.  நமது   எதிரி வக்ரசித்தன் .  இறந்து விட்டான். அரசன்  இல்லாமல்  இருந்தால்,  நாட்டில்  அராஜகம்  வளர்ந்து  விடும் என்று   மக்கள்   கருதி,  என்னை    தக்கனப்  பேரரசின்  மாமன்னனாக மகுடம்  சூட்டிக்கொள்ள,  வற்புறுத்தி  ஆர்ப்பாட்டம்   செய்கிறார்கள்..  தாங்கள்  உடனடியாக   திரும்பி வந்து,        ராஜ்யப்  பொறுப்பை ஏற்றுக்  கொள்ளுங்கள்." என்று  அந்தக்  கடிதத்தில் கண்டிருந்தது.
உடனே , திவ்யவர்மன்  தனது   மனைவியிடமும , மாமனாரிடமும், விஷயத்தைக்  கூறி ,  பயணத்திற்கு  அனுமதி  கேட்டான்.. அரசன்   கருணாசாகரனுக்கு , ஒரு புறம் தனது  மருமகன்   மிகவும்  புகழ் பெற்ற  மங்களபுர அரசன்  என்று    மிகவும்    பெருமையாகிவிட்டது.  ஆனாலும் ,தனது  பாசமிகு மகளையும் தன  மனம்  கவர்ந்த  அற்புத  வீரன்  திவ்யவர்மன்யும் பிரிய  வேண்டியது  குறித்து  மறுபுறம் வருத்தம்  !  சுபத்திராதேவி   அப்போது நிறைமாத கர்ப்பிணி..  கப்பல்  பயணம் ,  அவளுக்கு நல்லதல்ல . என்ற  கவலையும் அவனை . வாட்டியது.
 திவ்யவர்மன்னுக்கும்  அதே  கவலைதான்..  அவன் தனது   இல்லாள் சுபத்திராதேவியிடம் "  நீ  இங்கேயே  சில மாதங்கள்    தங்கியிரு. நான்   விரைவில்   திரும்பி  வந்து உன்னையும் , குழந்தையையும்  பாதுகாப்பாக,   கப்பலில்  அழைத்துச் செல்கிறேன்" என்று    கூறினான்.    ஆனால், சுபத்திராதேவி ,  தன்  அன்புக்  கணவன்  திவ்யவர்மனை சில நாட்களுக்குக்  கூடப்   பிரிந்து  இருக்க   ஒப்பவில்லை..  நானும்  உங்களுடன் கப்பலில்   வருவேன்..  என்று  பிடிவாதம்   பிடித்தாள் .
7
கடலுக்கும் , திவ்யவர்மனுக்கும்,  ஏதோ  பூர்வ ஜென்ம விரோதம்   போலும்!   நடுக்கடலில்,  சென்று  கொண்டிருந்த  போது  ஒரு  பயங்கர    சூறாவளி சுழன்று சுழன்று    வீசி, கப்பலைத்    தள்ளாட  வைத்தது..    அச்சத்தில், சுபத்திராதேவிக்கு   ஜுரம்   கண்டுவிட்டது.  சிறிது  நேரத்திற்குள், சுபத்திராதேவியின் தாதி அங்கு அப்போதே பிறந்த   குழந்தையைக் கையில் ஏந்தி வந்து  , " அரசே! நமது   ராணி சுபத்திராதேவி  இந்த குழந்தையை   ஈன்றுவிட்டு , நம்மை   விட்டகன்று மேலுலகம்   சென்று  விட்டார்'  என்ற   தாங்க முடியாத துயரச் செய்தியைத்  திவ்யவர்மன்டம் தெரிவித்தாள் .  திவ்யவர்மன்   துடித்துப்  போனான். "   தெய்வங்களே!  கிடைத்தற்கரிய செல்வங்களைத் தந்து, அவற்றை  உடனேயே  தட்டிப்  பறிப்பது தான்     உங்களது  வழக்கமா? ‘ என்று  மனம்   உடைந்து   கதறினான்..  தாதி   அவனிடம்  "  இப்படி  நீங்கள் மனம்  தளரக்கூடாது.  நமது  ராணி  சுபத்திராதேவியின் இந்தக் குழந்தையை நீங்கள்  தானே    வளர்த்து  ஆளாக்க வேண்டும்! ."  என்றாள்  . திவ்யவர்மன்  அந்த குழந்தையைக் கையில் ஏந்திக்  கொண்டு   புலம்பினான். "   செல்வக்  குழந்தாய்!   இதைவிட களேபரமான சூழலில்  எந்தக் குழந்தையும்  பிறந்திருக்குமா?------------இனியாவது
  உனது  வாழ்க்கை மிகவும்   அமைதியானதாக  அமையட்டும்! 
ஒரு   அரசனின்  குழந்தைக்கு இதைவிட ஒரு  கொடுமையான  வரவேற்பு எங்கணும் அமைய  முடியுமா?..........எனினும் .
 உனது   இயல்பு,  இனிமையும், அன்பும்    நிறைந்து  திகழட்டும்!.
 உன்னுடைய பிறப்பின் போது   நிலம்,நீர், தீ,  வையம்,  வானம், அனைத்தும்  உனக்கு   எதிராக  அமைந்தனவோ?
 அதற்கு   ஈடாக, அவை    எல்லாம்  தம் தவறு உணர்ந்து   .இனி வரும்  நாட்கள்  அனைத்தும்   இன்பமே  நிறைய அருள்   செய்யட்டும்..
உனது   இழப்பை .(  தாயை) இந்த   உலகின்  எந்த  இன்பம்  ஈடு செய்ய   இயலும்?-----------



8
7-3-2020  -   10am -------------
   கப்பல்  ஊழியர்கள், தங்களது அரசி , உயிர் பிரிந்த  துக்கச் செய்தியை  அறிந்து,  திவ்யவரனுக்கு  தங்களது  அனுதாபத்தை   தெரிவித்தனர்.. புயலும் மழையும்  சற்றும் குறைவதாக  இல்லை..  திவ்யவர்மன்  அவர்களிடம்,  " புயலும்  மழையும்  இந்த  குழந்தைக்கு  அபாயமாகுமோ  என்றுதான்  மிகவும் கவலையாக உள்ளது.  இந்தப்  புயல்  எப்போதுதான் நிற்கும்? "   என்றான்.    மாலுமிகள்  அப்போது, " அரசே!  மறைந்த  நமது  அரசியின் உடலை, கப்பலில்  இருந்து   அகற்றினால்தான்  புயலின் வேகம்  குறைந்து  மழை  நிற்கும்.  அரசியின்  உடலை,    தாங்கள் ,  இங்கு சூழ்ந்துள்ள  கடலின்  அலைகளுக்கு   விட்டுவிடுங்கள்..  அந்த  அலைகள்  ராணியின் உடலைப்    பாதுகாப்பாக  கடலோரத்திற்குத்   தாங்கிச்செல்லும். இதைக்  கூறுவதற்கு  எங்களை பொருத்தருளுங்கள். " என்று வேண்டினர்.
     இது  கடலோடிகளின்  வெறும் மூட   நம்பிக்கை என்று   திவ்யவர்மன்  அறிந்திருந்தாலும்,  அவர்களின் அச்சத்தை  உணர்ந்து,  அது  போலவே  செய்ய முடிவெடுத்தான்.    தனது  உதவியாளனை   அழைத்து , அரசியின்    நகைகள், வாசனைத்   திரவியங்கள்,   இவற்றோடு,அரசியைப்  பற்றிய  விபரங்களை  எழுதி,  ராணியின்  சவப்பெட்டியில்   வைக்க , கெட்டிக்  காகிதமும்  எழுதுகோலும்  கொண்டுவர  பணித்தான். கூடவே  ஒரு பட்டுச்  சேலையும் கொண்டுவர  சொன்னான்.   தனது  இதய ராணியின்   அழகு  முகத்தைக்  கடைசியாக  ஒருமுறை கண்டு "  எனதருமை  சுபத்திராதேவியே!   முறைப்படி,  நமது நாட்டின்  தேவாலய  கல்லறையில்,  குருமார்களின்  ப்ரார்த்தனையோடு,  நாங்கள்   அனைவரும்  மலர்களும், கண்ணீரும் சொரிந்து ,  தேவலோகத்திற்கு உனது   யாத்திரையை   தொடங்கி வைக்க    இயலவில்லை..  மன்னித்து அருள்வாய்!
இந்தக்  ,கடலின்    ஆழத்தில், முத்துச்  சிப்பிகள்  மட்டுமே  உனக்கு  காணிக்கையாக   அமையும்.   அலைகளின் ஓசை   மட்டுமே  உனது   மறைவுக்கு  சோக கீதம் இசைக்கும். " என்று   வருந்தி,  தனக்குத் தெரிந்தவரை , ராணியின்  ஆன்மா சாந்தி அடைய  பிரார்த்தனை  செய்தான்.
9
 ஒரு  அழகிய பெட்டியில், சுபத்திராதேவியின் உடலை பட்டுத்  துணி போர்த்துச் சுற்றி,  நறுமணமலர்த் திரவியங்கள்   தெளித்து, ராணியின்  நகைகள்,   அவற்றோடு  கூட, ஒரு  செய்திச்   சுருளில், "இவள்,   சுபதீபநாட்டின் மன்னா கருணாசாகரனின்    செலவ மகள்.!  மங்களபுர   மன்னன் திவ்யவர்மனின்  அன்பு  மனைவி.! . இந்தப்  பெட்டியைக்  காண நேரும்  மக்கள்,  இந்த துர்பாக்கியவதிக்கு முறைப்படி   கல்லறை  அமைத்து   குருமார்களின் பிரார்த்தனையோடு வானுலகிற்கு அனுப்பிவைக்க  வேண்டுகிறோம்!" என்று   எழுதி  அதையும்  பெட்டிக்குள் வைத்து  ,  தன்   இரு கரங்களில் அந்தப்   பெட்டியை  ஏந்தி,  துக்கத்தில்  வெடித்த   இதயத்துடன், தனது   மனைவியின் சடலப் பெட்டியை   கடலுக்குள்  இட்டான்.
    புயல்  சற்று  ஓய்ந்தவுடன்,  மாலுமிகளிடம்,  "  நாம்  மீண்டும் மங்களபுரக்   கரையை   அடைய நாளாகிவிடும்.  குழந்தையை  நாம்   அருகில்  உள்ள  மத்ஸயத்தீவு  மன்னனிடம் பாதுகாப்பாக  விட்டுவிட்டு, நமது  பயணத்தைத்  தொடருவோம்' என்று  பணித்தான். 
-----------

10 

     நிகழ்ச்சி நடந்த கடல்  பகுதிக்கு  அருகே, மகரத்வீபம்  என்ற ஒரு  தீவு  இருந்தது.   அங்கு  புகழ்  பெற்ற மருத்துவர் ,  வாழ்ந்து   வந்தார்.  கடலோரத்தில்  அவர்  நின்றிருந்த  நேரத்தில்,  அவரது   பணியாளர்கள், ஒரு   பெரிய   பேழை கரையில்   ஒதுங்கியது என்று    அவரிடம்  கூறினார்கள். .அவர்  அந்தப்   பேழையை தனது   வீட்டில்  கொண்டு போய் வைக்க கூறினார். அங்கு   சென்று அந்தப்  பேழையை  திறந்து   பார்த்தபோது  அதில் மிக மிக   அழகான ஒரு  இளம் பெண்  இருந்தது  கண்டு  வியப்படைந்தார்.  அதோடு  அங்கு   இருந்த விலை  உயர்ந்த  ஆபரணங்கள் ,  வாசனைத் திரவியங்கள்  கண்டு  , இந்தப்   பெண்  எதோ ஒரு  உயர்குடிப்  பெண்  என்று    யூகித்தார். அப்போது  அவர் கண்ணில்,  அந்தப்  பேழையில்  இருந்த  செய்திச்  சுருள் , தென்பட்டது. அதைப் படித்து  , அந்தப்  பெண்  ஒரு   இளவரசியும் ,ராணியும்  ஆவார்  என்று  தெரிந்து  கொண்டார்.   பெண்ணின் முகத்தில்   மரணத்தின்  சாயல்   தெரியவில்லை.  ஏதோ   ஆழ்ந்த  உறக்கத்தில்  இருப்பது  போல   தோன்றியது..  "  எல்லாரும் சற்று  தள்ளி    நில்லுங்கள்., இந்த  அம்மைக்கு  நல்ல  காற்று  வர  வழி   விடுங்கள்.     தணல்  அடுப்பை அருகில்   வையுங்கள். உடல்  சூடாகட்டும்.   இனிய  மெல்லிய இசை   ஒலிக்க   ஏற்பாடு  செய்யுங்கள்.  இந்த   மாது   இறக்கவில்லை. அவருக்கு இன்னமும்   ஸ்வாசம்   இருக்கிறது.. கண் இமைகள் கூட  அசைகின்றன. எதோ  மயக்கத்தில்  இருந்திருப்பாள் .  அதை  மரணம் என்று   தவறாக எண்ணி , அவசரப்பட்டு  கடலில்   இட்டு  விட்டனர் .   இன்னும் சிறிது நேரத்தில், அவள்  பிழைத்து    தன்னுடைய துயரக் கதையைக்   கூறி   நம்   அனைவரையும் கண்  கலங்க வைக்கப்போகிறாள்.  என்று  அவர்   கூறி  சுபத்திராதேவியை  பிழைக்க வைத்து  விட்டார்.  கண்  விழித்த சுபத்திராதேவி,  நான்  எங்கே  இருக்கிறேன்?   என்னுடைய  கணவர் எங்கே?   இது  எந்த  இடம்?  என்று    கேட்டாள்  அப்போது   அவளிடம்  படிப்படியாக நடந்த   கூறி  ,  இறுதியாக அந்த  கடிதச் சுருளையும்  காண்பித்தார். ' நான்  மயக்கத்தில் இருந்தேன்.  பிரசவம்  எப்படி ஆயிற்று,   குழந்தை என்ன ஆயிற்று   என்பது எதுவும்  நான்  அறியேன்.  இதில் உள்ளது  எனது ஆருயிர்க் கணவன் கையெழுத்துதான்.. அவர் எங்கே  இருக்கிறார்? அவர்  இல்லை   என்றால்,  நான்  ஒரு  கோவிலில்    பெண்    துறவியாக  வாழ்வது தான் எனது    விருப்பம். அதற்கு  உதவி செய்யுங்கள்என்று  மருத்துவரிடம்    வேண்டினாள். அப்போது  மருத்துவர்,  "  நீங்கள்  அவ்வாறு  முடிவு   செய்தால், தங்களுக்கு  தொண்டு செய்ய  எனது   உறவுப் பெண்  ஒருத்தியை  அனுப்பி வைக்கிறேன்.  அருகில் உள்ள  கோவிலில்  நீங்கள்  சேர்ந்து , மனம் தளராமல்    இருங்கள்..  நல்லதே நடக்கும்'என்று  அங்கு  கொண்டு   விட்டார்.  ராணியும்,  அங்கு   தங்கி ஒரு  பெண்  துறவியாக   வாழ்ந்து வந்தார். 

4pm- 7-3-2020

----------------

11


3pm ---8-2-2020
11
 சமுத்திரத்தில்  பிறந்த பெண்  என்பதால்,  திவ்யவர்மன்    அவளுக்கு சாகரி   என்று  பெயரிட்டு,  மத்ஸ்யதிவீபத்தின்  தலைவன்   சத்யேந்திரனிடம்   தனது  குமாரியை  ஒப்படைத்து, சில  காலம் வளர்த்து வர   ஏற்பாடு  செய்தான்.சத்யேந்திரன்   மனைவி  மேகலை  ,  குழந்தையை  அன்புடன்  ஏற்று, இந்தப்  பொறுப்பை  எங்களிடம்  தாங்கள் ஒப்படைத்தது   எங்கள் பாக்கியம்! எனக்கும்  ஒரு பெண்  குழந்தை உள்ளாள்.  அவளைவிட,  பிரியமுடன்  தங்கள் குழந்தையை   நான்    பார்த்துக்கொள்வேன். என்று  நன்றி கூறி நெகிழ்ந்தாள்..
சத்யேந்திரன், "  அரசே!  எங்கள்  தீவின் மக்கள்   அனைவரும் பஞ்சத்திலும்   பட்டினியாலும்   ,பரிதவித்தபோது   தாங்கள்   எங்களுக்கு  செய்த  பேருதவியை  நாங்கள்  எப்படி மறப்போம்
நான்  மறந்தால், எனது  மக்கள்   அனைவரின் வெறுப்பையும்,  அருவெறுப்பையும்  ஒரு  சேர நான்   பெற   நேரிடாதா?  அத்தகைய நன்றி    மறக்கும் இழி  செயலை நான் ஒருக்காலும்  செய்ய  மாட்டேன்.'. தங்களைப்போன்ற  சிறந்த  அரசனின்  மகள்  இந்தக்   குழந்தை  என்பதை  ஒரு  போதும்    மறவாமல்,ஒரு  ராஜகுமாரியாக , குழந்தையை    கண்ணும்  கருத்துமாக வளர்ப்பேன்.  உறுதி. தாங்கள்  சற்றும்  கவலைப் படவேண்டாம்! ; என்று   வாக்குறுதி  அளித்தான்.
இதனால்,  நிம்மதி  அடைந்த  திவ்யவர்மன், தனது மங்களபுர  நாட்டிற்கு பயணம்   தொடங்கினான்..  குழந்தையின்  தாதி   மதுரம்,  இவ்வாறு திவ்யவர்மன்    பிரிந்து   செல்வதை நினைத்து   கண்ணீர்  . விட்டு   அழுதாள்..'   விரைவில்  வந்து  உன்னையும் எனது   செல்வ  மகளையும்  நான்  கூட்டிச் செல்வேன் ,  நிச்சயம்..  ! வருந்தாமல்,  என்னை   வழியனுப்பு 'என்று   அவளைத் தேற்றி , திவ்யவர்மன்  ,  பயணித்தான்.      
12      
  9-3-2020 ( MONDAY) – 11 AM
 திவ்யவர்மன் ,  சில  நாட்களில்,  மங்களபுரியை அடைந்து,  மீண்டும் அதன் அரசப்   பொறுப்பை ஏற்றுக்கொண்டான்.   தக்கனப் பேரரசின் மன்னன்  வக்ரசித்தனை   மக்கள்  கிளர்ந்தெழுந்து , கொன்றுவிட்டார்கள்..  அனைத்து மக்களும் ஒரு  மனதாக , திவ்யவர்மன் , தக்கனப்  பேரரசின்   சக்ரவர்த்தியாக   முடி சூட பெரும்  ஆதரவு   தந்தனர்.   எனவே,  திவ்யவர்மன், பேரரசின்   மாமன்னனாக  பொறுப்பேற்றான்.   அகண்ட  அந்த  பேரரசில்  பற்பல  சிற்றரசர்கள் இருந்தனர் . ஒரு    சிலர், திவ்யவர்மன்   இவ்வாறு சக்ரவர்த்தியாகப்  பதவி  ஏற்றதை  மனமார   வரவேற்றனர்..  ஆனால், சில  குறுநில  மன்னர்கள்,   பொறாமையினால்,  அவர்களுக்குள்   கூட்டணி அமைத்துக்  கொண்டு ராஜ்யத்தின்   பல இடங்களில்   கலகம்   செய்தனர். ஒரு   முனையில் கலகத்தை   அடக்கினால்  , வேறொரு  முனையில்  மீண்டும்  கலகம்  விளைவித்தார்கள்.   எதிரிகளில், வக்ரசித்தனின் பல   உறவினர்களும் இருந்தார்கள்.  ஆக,    தக்கனப் பேரரசின்  பல    பகுதிகளில், உள்நாட்டு  யுத்தம்  தொடர்ச்சியாக  நடந்து   வந்தது.. இதுதான்  சரியான  சமயம்  என்று பார்த்து,  தக்கனப்  பேரரசின்   வடக்கில்  இருந்த  அண்டை நாட்டின்,    எதிரி   மன்னர்களும், கூட்டணி அமைத்துக்கொண்டு,  திவ்யவர்மனின் படைகளைத்   தாக்கினர்..  ராஜ்யத்தையும்  தனது மக்களையும்,  துரோகிகள், மற்றும்  குரூர  எதிரிகளிடமிருந்து காப்பாற்ற ,திவ்யவர்மன் ,  நேரடியாக  இடைவிடாத பலமுனைப்   போர்களில்  தானே  முன்னின்று , போர்  முனையில்  பணியாற்ற   நேர்ந்தது..
   முழு  அமைதியை நிலை  நாட்டுவதற்குள்  பதினைந்து  ஆண்டுகள்  கடந்து   போய்விட்டன.. தனது   செல்வ  மகளைக்  காணப்  பயணம்  மேற்கொள்ள அவன் நினைத்த  போதெல்லாம்,,   ஏதேனும் புதிய  பிரச்னைகள் ,  தோன்றி , பயணத்தைத் தள்ளிப்  போட நேர்ந்தது.  மேலும், தனது   நண்பன் சத்யேந்திரன்  நல்லவன்,, அவனது   மனைவி மேகலாவும்   நல்லவள்,  கூடவே தாதி  மதுரமும்  அங்கு  உள்ளாள் , எனவே   குழந்தையை கவனமாகப்  பார்த்துக்கொள்வார்கள், என்று  அரசன்  திவ்யவர்மன் தனது  மனதைத்  தேற்றிக்கொண்டான்.  அரச பொறுப்பில்  உள்ளவர்களுக்கு,   சொந்த  வாழ்க்கை ஏது? ( அவர்கள்,நேர்மையானவர்களாக இருந்தால்!).
    இவ்வாறு  பல   ஆண்டுகளுக்குப் பின்னர்,   நாட்டில் முழு   அமைதி   திரும்பியவுடன்,,  திவ்யவர்மன்  தனது   அற்புத அமைச்சன்   குணசீலனையும் கூட்டிக் கொண்டு,  தனது  செல்வ   மகள்,  சாகரியைக்   காண  மிகுந்த   ஆவலுடன்,   மத்ஸயதீவுக்குக்   கப்பலில் பயணத்தைத்  தொடங்கி  பல  நாட்களுக்குப்  பிறகு  அங்கு   போய் சேர்ந்தான்.
------------------
     இந்தப்  பதினைந்து  ஆண்டுகள்   இடைவெளியில் பல  துரதிருஷ்ட  சம்பவங்கள் நிகழ்ந்து    விட்டன..  சத்யேந்திரன் தான்  கொடுத்த   வாக்குப்படி,   சாகரிக்கு ஒரு   குறையும்   வராமல், சிறப்பாக  வளர்த்து  வந்தான்.
அவனது   மகளும்  சாகரியின்   வயதுதான்.   இருவருக்கும்  ஒரே   மாதிரி, மிகவும்   சிறந்த   ஆசிரியர்களைக்  கொண்டு,  இலக்கியம், இசை, ஓவியம் , விவாதம் ,நன்னெறி ,என   அனைத்தும்   பயிற்றுவித்தான்..   நாளடைவில், சாகரி    கண்டவர்  வியந்து மயங்கும்,  அற்புத  அழகுப்   பதுமையாக, அவளது அன்னை  சுபத்திராதேவி  போலவே ,  வளர்ந்து ,  ஊரார் அனைவரின்  செல்லக் குமரியாகத்  திகழ்ந்தாள்.  சத்யேந்திரனின்  மகளும் , இவ்வாறு  பயிற்றுவிக்கப் பட்டாலும்,   அவளுக்கு  அவ்வளவாக   படிப்பு ஏறவில்லை.   சத்யேந்திரனின்  மனைவி   மேகலா இது  பற்றி மிகவும்  வருந்தி  பொறாமையினால், கொடும்  செயல்   செய்யத்   துணிந்தாள். . தாதி மதுரம், ஒரு  நாள், உடல் நலம் குறைந்து  , திடீரென்று  மரணம் அடைந்து  விட்டாள்
 வளர்ப்பு   அன்னை மதுரம்  , இவ்வர்று  தன்னைப்   பிரிந்ததில் , குழந்தை சாகரி   மனம்  உடைந்து ,  மதுரத்தின்  கல்லறையிலேயே  எப்போதும்  மலர்க் கொத்துகள்   வைத்து கண்ணீர்  சொரிந்து   தனிமையில்   வாடினாள் .
   தாதியின்  மறைவுக்காகக்  காத்திருந்த மேகலா,  ஒரு   கொடிய  அடியாள் , குரூரனைக்   ரஹஸ்யமாக   வரவழைத்து,   சாகரியைக்    அழைத்துச் சென்று  அவளைக்    கொன்றுவிட  ஏற்பாடு செய்தாள் .  சத்யேந்திரன்  இது பற்றி  அறியவில்லை. குரூரனுக்கும்  கூட, சாகரியப்  பிடிக்கும்! அவன்  " இவ்வளவு நல்ல  குழந்தை ! இவளுக்கு எப்படி  நான்  தீங்கு செய்ய முடியும்? என்று   முதலில் மறுத்தான். பின்னர்  . தனது  அரசி மேகலாவின் கோபத்திற்குப் பயந்து, வேண்டா  வெறுப்பாக சாகரியை   வெளியே  அழைத்துக் கொண்டு  .சென்றான்.
-----------------------------------------
13


கடற்கரையில்  உலவிய போது , சாகரி    குரூரனிடம் " காற்று இப்போது  எந்த திசையில் வீசுகிறது ? மேற்கிலிருந்தா? " என்று கேட்டாள் ' இல்லை! தென்மேற்கிலிருந்து வீசுகிறது  என்றான் அவன்.  "  நான்  பிறந்தபோது, காற்று  .வடக்கில்  இருந்து வீசியது   என்று எனது  அருமைத் தாதி மதுரம்  கூறியுள்ளாள் .  அப்போது, தாதி  மூலம் அவள்   அறிந்திருந்த அவளது  பிறப்பின்  போது  நடந்த  அவ்வளவு  சம்பவங்களும் அவளது  நினைவை    வாட்டின.  " என்  தந்தை  அஞ்சா நெஞ்ச்ர் .  புயல்  அடித்து   கப்பல் தடுமாறிய போது  அவரே சிறந்த   மாலுமியாக மாறி,  உதவியாளர்களுக்கு  மன  தைரியம்  கொடுத்தார். " என்றாள்.  . அவளது  பேச்சை இடை மறித்து , குரூரன்  , " உனது  இறுதிப்   பிரார்த்தனையைக்  கூறும் நேரம்  வந்து விட்டது " என்றான். அவன் குரல்  திடீரென்று    மாறியதைக்  கேட்டு  சாகரி   திடுக்கிட்டாள்.    "இறுதிப்   பிரார்த்தனைக்கு    சிறிது நேரம்  கூட வேண்டுமானால் தருகிறேன்.  ஆனால்  ,  மிகவும் நேரம்  இல்லை. " என்றான். " நீ  என்னைக்  கொல்லப்  போகிறாயா? " என்று  கேட்டாள். " ஆம !   ராணியால் எனக்கு தரப்பட்டுள்ள   உத்தரவு!" என்றான்!  "  ராணிக்கு என் மேல் அப்படி என்ன கோபம்? நான்  ராணிக்கு  எந்த   தீங்கும் நினைக்கக்கூட இல்லையே!   ராணிக்கு    மட்டுமல்ல..எந்த   ஒரு   ஜீவனுக்கும்,  நான்   மனத்தால் கூட   தீங்கு  நினைத்தது இல்லையே! " என்றாள்  சாகரி . " உத்தரவை  நிறைவேற்றுவதுதான் என் போன்ற  வேலையாட்களின்   பணி !   விவாதம் செய்வதல்ல. என்று  கூறி,  குரூரன் ,சாகரியை கொல்ல   தயாரானபோது,  சில கடல் கொள்ளைக்காரர்கள்   அங்கு வந்து,  ' பணக்காரப்  பெண்! விற்றால்  நிறைய  பணம்  கிடைக்கும் என்று  சாகரியைக்   கடத்திக் கொண்டு அவர்களுடைய கப்பலுக்கு  கொண்டு  போய்  விட்டார்கள்.
--------------
14
  இவ்வாறு கடத்தப்பட்ட சாகரியை  , அந்தக் கொள்ளைக் கூட்டம்,   மயூரபுரி  என்ற  வேறு ஒரு   நாட்டின்   கேளிக்கை விடுதிக்கு  , ஒரு  அடிமைப்  பெண்ணாக விற்று விட்டார்கள்.    அடிமையாகவே  இருந்தாலும், அவள்,   அந்த   நகரின், மற்ற  செல்வந்த வீட்டுப்   பெண்களுக்கு, இசை, ஓவியம்,  இலக்கியம், போன்ற   கலைகள்  அனைத்தையும் கற்பித்து,  மிகவும்   புகழ் பெற்றாள்     விடுதியின்  சொந்தக்காரன்  சாகரியின் மூலம் பெரும்  செல்வந்தனாக    மாறிவிட்டான். விடுதிக்கு   வந்த   இளைஞர்களும்,  அவளது  அறிவு, பண்பு, மற்றும்  நன்னடத்தை மூலம்,   தாங்களும் மாறி  ,  புது  வாழ்க்கை   தொடங்கினர்.. இது  பற்றியெல்லாம்  கேள்விப்பட்ட , அந்த  நாட்டின்  இளவரசன்  அமரசேனன் , அவளை   நேரில்   கண்டு, அவளது   குணநலன்களை தெரிந்து கொள்ள , தானே  நேரில்  அந்த  விடுதிக்கு  வந்து  அவளது   அழகு, அறிவு, திறமை, பேச்சின்  இனிமை, பண்பு  பற்றி   அனுபவத்திலேயே     உணர்ந்தான் .  அவளை  மனைவியாகவும் வரிக்க   விரும்பி, சாகரியின், குடும்பம் பற்றி  விபரம் கேட்டான்.  அவன்  எவ்வளவு    கேட்டும்,   கண்ணீர்  விட்டு  அழுவது  தவிர   சாகரி  , தன்னைப் பற்றிக்  கூற மறுத்து  விட்டாள் .  ஒரு  கேளிக்கை விடுதியில்  அடிமை  , தான்  ஒரு  புகழ்  பெற்ற   மன்னனின் புதல்வி  என்று  சொன்னால் யார்  அதை   நம்புவார்கள் ? என்று   தயங்கி அவள்  தன்னைப் பற்றி   யாருக்கும்  எதுவும்  சொல்வதை   தவிர்த்தாள் .
-------------------------
15
    இது  இவ்வாறிருக்க , மத்ஸ்ய தீவில், ராணி மேகலையிடம், குரூரன் தான் சாகரியை கொன்று  விட்டதாகக் கூறி , தப்பித்துக்கொண்டான் .அந்த கெட்ட   பெண்ணும்,  தன  கணவனையும் ஊரையும் ஏமாற்ற  டம்பமாக ஒரு  கல்லறை   கட்டி  அங்கே ஒரு  அழகான  மண்டபமும்  அமைத்தாள் .
     இவ்வளவும்  நடந்த   பிறகு தான், திவ்யவர்மன்  தனது  செல்வ மகளைக் காண வந்து  சேர்ந்தான்! பாவம்!  அவனுக்கு காணக் கிடைத்தது  அவளது  கல்லறை   மட்டுமே!   அந்த துயரச் செய்தி  அறிந்தது முதல், அவன் மனம்  உடைந்து போனான். அவனது   சித்தமும்  முற்றும் கலங்கி விட்டது.  யாருடனும்  பேசுவது  இல்லை.   யாரையும் அவனது  நினைவில்   இருத்த   முடியவில்லை.   வெறித்த   பார்வையுடன், சிலை  போல  மாறி   தனது  கப்பலுக்கே    திரும்பி, விட்டான்.  
--------------------------
16
  மத்ஸ்ய தீவிலிருந்து , மங்களபுரம்  செல்லும் கடல்  வழியில்தான்,  மயூரபுரி இருந்தது.   அரசர்களுக்கே உரித்தான ஒரு   அழகான கப்பல்,  தனது  நாட்டின்  கடல்   வழியே   செல்வதைக்  கண்டு,இளவரசன்   அமரசேனன், ஒரு   படகில் ,அந்த கப்பல்   அருகே சென்று  , இது  எந்த நாட்டு மன்னரின்  கப்பல் ?   பயணிப்பது யார் ? என்று    விசாரித்தான்.  அவனை ,  குணசீலன்  அன்புடனும்,  மரியாதையுடனும்  வரவேற்று,  கப்பலில் மங்களபுர பேரரசன் திவ்யவர்மன்  உள்ளதையும், தனது   மனைவியும் , மகளும் இறந்து விட்ட  துக்கத்தில்,அவர்  யாருடனும்   பேசுவதே   கிடையாது.  எங்களுக்கும் என்ன   செய்வது என்று    தெரியவில்லை.இப்போது   நாங்கள் மங்களபுரத்திற்கு திரும்பிச் சென்று  கொண்டிருக்கிறோம்' என்று  கூறினான்.    அது கேட்ட இளவரசன்  அமரசிம்மன்,  திவ்யவர்மனைப்   பார்த்து   வணங்கி,
" அரசே! நீடூழி   வாழ்க !  என்னை ஆசீர்வதியுங்கள்" என்று  கூறினான்.    ,ஆனால்,  திவயவர்மன்  எதையும்  புரிந்து  கொள்ளவே இல்லை. சிலை  போல  இருந்தான்.  அப்போது  அமரசேனன்க்கு   ஒரு  யோசனை   தோன்றியது.  " எனது  நாட்டின் விடுதி    ஒன்றில்,ஒரு  அற்புதப் பெண்  உள்ளாள்.. மிகவும்   இனிமையாகப் பேசி,  எவர்  மனதையும் , உள்ளத்தையும்  கவர்ந்து  விடுவாள். அவளை  நீங்கள்    அனுமதித்தால்,இங்கு   கூட்டி வருகின்றேன்.  அவள்  வந்து  மன்னரிடம்   பேசினால்,  மன்னர்  இயல்பான மன   நிலைக்குத்  திரும்பி  வந்து விடுவார்.முயற்சிக்கலாமா? என்று   குணசீலனிடம் கேட்டான்.  'அப்படியானால்,   அவசியம் அந்தப்  பெண்மணியை இங்கு  கூட்டி  வாருங்கள்.  ' என்று  குணசீலன்   வேண்டினான்.  அவ்வாறே , அமரசிம்மன்  , சாகரியை  அங்கு  வர ஏற்பாடு  செய்தான். அவளைக்  கண்ட  மாத்திரத்தில், கப்பலில்  இருந்த  அனைவரும்,
இனம் புரியா  பரவசம் கொண்டனர்.  'இவள்  ஒரு    அரசகுமாரி!தான்! " என்று  ஒருமித்து உள்மனதில் உணர்ந்தனர்.  அது  போலவே,  அமரசேனனும்,  ஒரு  ராஜகுமாரியிடம்  பேசுவது  போல மரியாதையுடன், " சித்திரப் பாவையே! இங்கு  ஒரு   அரசர்  உள்ளார்.  துக்கத்தினால் மனம்  பேதலித்து, யாருடனும்  பேசாமல் , எதுவும்   உணராமல் உள்ளார்.  நீங்கள்  நினைத்தால்,   அவரை  குணப்படுத்த முடியும்.   தயவு செய்து    காப்பாற்றுங்கள்.என்று   இனிமையாக வேண்டினான்.   சாகரி  அப்போது,  என்னால் முடிந்த  அளவு முயற்சிக்கிறேன்! ஆனால்  ஒரு    நிபந்தனை,! நான்    அவருடன் பேசும்போது,   என்னையும்  எனது   சேடியையும்  தவிர  வேறு  யாரும்  அங்கே வரக்கூடாது..    வந்தால், பயனில்லாமல்  போகும்.  என்று கூறி தனது  சிகிச்சையை தொடங்கினாள்.
-------------------------------------


17
  மயூரபுரியின் விடுதியில் இருந்த போது  யாரிடமும்  பகிர்ந்து கொள்ளாத தனது பிறப்பு பற்றி , அதன் பெரும் சோக மயமான நிகழ்வுகள் பற்றி இப்போது சாகரி  , திவ்யவர்மனிடம் விவரமாக  வர்ணித்தாள் .  பெரும்  துயரத்தில் உள்ள   எவரும்,  அதைவிட துக்க நிகழ்வு பற்றி  கேட்க   நேரும்போது, தங்களது துயரத்தை மறக்க நேரும் என்று   அனுமானித்து சாகரி  தனது  துன்பக் கதையை ,  மன்னனிடம் கூறத் தொடங்கினாள்! 
   அவளது   இனிய  குரலும், கிள்ளைமொழிப   பேச்சும், எப்படியோ ,  திவ்ய வர்மனின் மனதைத் தொட்டது!  எந்நேரமும்  வெறித்து , நிலத்தை   நோக்கி  நின்ற அவனது  கண் இமைகள்   சற்றே  திறந்துபேசுவது யார் என்று   நோக்கின.!  தன  எதிரே தன   மனைவியின் உருவத்தைப்  பார்த்து, பரவசமுடன்  பேசவும்  தொடங்கினான்!"  ஆஹா! என் எதிரே தர்சனம் தரும் இந்தப் பெண்  எனது   ஆருயிர்  மனைவி போலவே  இருக்கிறாளே! என்   செல்வகுமாரி  உயிரோடு  இருந்தால், இவள்  போலவே  அல்லவா இருப்பாள்  என்று  மிகவும்  மகிழ்ந்து
 ," நீ   யாரம்மா? உனது  தாய்- தகப்பன் யார்? மிகவும்  துயரச் சூழலில் நீ   பிறந்தது பற்றி   பேசினாயா? எனது   துயரத்தில், ஆயிரத்தில் ஒரு  பங்கேனும்,  நீ   அனுபவித்து, அவற்றைத் தாங்கியிருந்தால், நீ  ஒரு  மனோதிடம்    மிக்க  ஆண்மகன் போல   வாழ்ந்திருக்கிறாய்!  நானோ ஒரு   பெண்பிள்ளை போல  துயரத்தில்,  ஒடிந்து . போயுள்ளேன்!   உன் பெயர்  என்னம்மா? வா! இங்கே என்  அருகில்  அமர்ந்து  உன்னைப்பற்றி  நிறைய  பேசு!" என்றான் திவ்யவர்மன். ! 
"என் பெயர் சாகரி.   " என்றாள்  சாகரி 
 தான் தனது  குழந்தைக்கு இட்ட அபூர்வ பெயரே இவள்   பெயரும் என்று   தெரிந்தவுடன்.,
" இது நிஜம்  தானா ? வானுலக தேவதைகள் என்னை  மதி  மயக்கி   ஏமாற்றுகிறார்களா?" என்று    .கூவினான்.
 " அரசே!  தாங்கள் பொறுமையாக நான்  சொல்வதைக் கேட்க  வேண்டாமா?  உண்மையிலேயே சாகரி  என்ற இந்தப்  பெயர் எனக்கு  என்  தந்தை இட்ட   பெயர்தான்.  அவர்  ஒரு  புகழ் பெற்ற  மன்னர் " என்றாள்  "    
    " கடவுளே! !உனது  தந்தை ஒரு   அரசனா  ! நீ   கூறுவது  உண்மைதானா?   நீ  எப்போது  எங்கே  பிறந்தாய்? உனக்கு உன் தந்தை இப்படிப் பெயர்   வைக்க  காரணம்   அறிவாயா?" என்று கேட்டான். 

"'அரசே! என் பெயர்  உண்மையிலேயே  சாகரி  தான். ! கடும் புயலில்   கடலில்  பிறந்த பெண்   என்பதால்,எனக்கு  என் தந்தை  இவ்வாறு  பெயர்  இட்டாராம்!    என்  வளர்ப்புத் தாய்  என்னிடம்  கூறியிருக்கிறாள் " என்றாள்  சாகரி . " அரசே! என் தாய்  ஒரு  ராஜகுமாரி. . நான் பிறந்த உடனேயே  அவள் இறந்து  விட்டாள் என்று  எனது  வளர்ப்புத் தாய்  கூறியுள்ளார். எனது  தந்தை  என்னை  மத்ஸயதேசத்தின்  மன்னா 
சத்யேந்திரனிடம்   ஒப்படைத்து  என்னை  வளர்க்கச்   சொல்லி  து  நாட்டிற்கு சென்றார். பிறகு  தகவல்  எதுவும்  இல்லை.  எனது  தாதி  உடல் நிலை  சரியில்லாமல்   மறைந்தவுடன், மத்ஸ்ய  தேசத்தின் ராணி  என்னைக்  கொல்வதற்கு  ஒரு   முரடனிடம்   கொடுத்தாள்.  அப்போது,  கடல்  கொள்ளைக்காரர்கள், என்னைக் கடத்தி, மயூரபுரி  நாட்டின்  ஒரு விடுதியில் .  அடிமையாக விற்று  விட்டார்கள். அந்த  அடிமைப் பெண்தான் இப்போது  தங்கள்  முன்னால் இருந்து   பேசிக்கொண்டிருக்கிறேன்!... அரசே! தாங்கள்   கண்ணீர்   சொரிந்து அழுவது  ஏன்? ஒரு  வேளை , நான்   கற்பனையாக  புனைந்து கூறுகிறேன் என்று   ஐயப்படுகிறீர்களா?  இல்லவே இல்லை அரசே! நான் உண்மையிலேயே    மங்களபுர  அரசன் திவ்ய வர்மனின் புதல்விதான் ! நான் கூறி.யது அனைத்தும் முற்றிலும்   உண்மை!"
என்றாள்   சாகரி.  .
 திவ்ய  வர்மனுக்கு இன்பப் பரவசம்    ஆகிவிட்டது. அவன் உரத்த  குரலில்  கூவினான்!  "    எல்லோரும் இங்கே  உடனே  வாருங்கள். எனது   அருமை  நண்பன்  குணசீலா! இந்தப்  பெண்தான்  எனது  அருமைப் புதல்வி  சாகரி ! . எனக்கு    எனது  புதிய ஆடைகளைக்  கொண்டுவந்து கொடுங்கள் ! எல்லோரும்   உங்கள் இளவரசியை   மண்டியிட்டுப்   பணிந்து ,  வணங்கி  வாழ்த்துங்கள்.". என்று  . மிகவும்   உற்சாகமாக  . சத்தமிட்டு  உரைத்தான்.
  அப்போது  இளவரசன்  அமரசேனனை  முதல் முறையாகப்  பார்ப்பது  போல  கண்டு  "  இந்த இளைஞன் யார்   " என்று  .கேட்டான். "  இவர் அருகில் உள்ள மயூர  தேசத்தின்   இளவரசர்.  அமரசேனன் என்று ,கே!ட்டறிந்து " தங்களுக்கு   நல்வரவு!  உங்களைக் காண்பதில் மிகவும் மகிழ்ச்சியாக  உள்ளது " என்று   வரவேற்றான்.. "   அன்பர்களே! இது  என்ன  இனிய கானம் ?  எங்கிருந்து   வருகிறது? " என்றான்.  அப்படி  ஒரு   இசையும் யாரும்   கேட்கவில்லை.    பரவசத்தால்,அரசன் இவ்வாறு    உணர்கிறான்  என்று  யாரும்   மறுக்கவில்லை.. அரசன்   மயக்கம்  அடைந்து சாயும் பொது, , அவனைத் தாங்கி   வசதியாக  உறங்க  வைத்தார்கள். சாகரி  தனது   தந்தைக்கு அருகில்  அமர்ந்து  கவனித்துக்  கொண்டாள்! 
--------------------------
18
10-3-2020
10am- 2pm
------------
  18,19
  உறக்கத்தில் இருந்த திவ்யவர்மன் , ஒரு அருமையான கனவு கண்டான். 


துர்காபுரம் என்ற புகழ் மிக்க  அம்மன்  கோவிலின் தெய்வம் அவனது கனவில்   

தோன்றி, " நீ  எனது  கோவிலுக்கு  வந்து  உனது  துயரம் மிகுந்த வாழ்க்கைக் 

கதையை  முழுவதும்  கூறி   வேண்டுதல்  செய்!  உனக்குப்   பல  அற்புதமான  

வரங்கள்  தருவேன்" என்று   கூறியது.  .விழித்தெழுந்த  திவ்யவர்மன் , மிகவும் 


புத்துணர்ச்சியை   உணர்ந்தான். அனைவரிடமும்,   அந்தக் கனவைப் பற்றிக் 

கூறி,  முதல்   வேலையாக , துர்கை  அம்மனின்  கட்டளையை   நிறைவேற்ற 

வேண்டும் .   கப்பலை துர்காபுரம்  நோக்கி உடனடியாகச் செலுத்துங்கள்  எனக் கட்டளையிட்டான்..    அப்போது, மயூரபுரியின்  இளவரசன்  அமரசேனன் , "மாமன்ன!  எனது  சின்னஞ்சிறு  ராஜ்யம்  , கூப்பிடு  தூரத்தில் தான் உள்ளது. எங்கள்  நாட்டின் மண்ணில்   தங்களது பொற்பாதங்களைப்  பதித்து ,  எங்கள் மக்கள்  அனைவருக்கும்  ஆசி  அளித்து அருளுங்கள். அது    எங்களுக்கு பாக்கியம். " என்று   பணிவுடன் வேண்டினான்.     திவ்யவர்மனும்,  அந்த  வேண்டுகோளை  ஏற்றுக்கொண்டு,"  கண்டிப்பாக  ஓரிரண்டு   நாட்கள், உங்களது  இனிய தீவு  நாட்டில் ,  நாங்கள் அனைவரும் வந்து  தங்கிச்  செல்கிறோம்!. எனது  மகளை , பாதுகாத்த  தீவின் மக்களை க்  காண  எனக்கும் விருப்பம் தான்! : என்று கூறி,  அங்கு போய்   சேர்ந்தனர்.. தனது இதய  தேவதை சாகரிக்கும்,  அவளது அன்புத் தந்தை  அவரது  பரிவாரங்கள்  அனைவருக்கும், இளவரசன்   அமரசேனன்  அற்புதமான  வரவேற்பும்  உபசரிப்பும் அளித்தான்  என்பதைக்  கூறவும்  வேண்டுமா?   அமரஸேனனின் உள்ளக  கிடக்கையை ,  திவ்யவர்மன்  அறிந்து கொண்டு  , சாகரிக்கும்   அதில்  ஆட்சேபணை  இல்லாததினால்.,   திருமணத்திற்கு  அனுமதி  ,கொடுத்து, "  அமரசேன!!
நான் இயல்பு  நிலைக்குத்  திரும்பியதில், நீயும்  ஒரு  காரணம் அல்லவா! நான் மிகவும்  நன்றியுடன்  எப்போதும்  உன்னை மனதில்  இருத்துவேன்.  துர்க்கை அம்மன்   என்னைத்  தனது   சந்நிதானத்த்துக்கு உடனடியாக வரச்  சொல்லி  கட்டளை  இட்டுள்ளாள்.  நீயும் என்னுடன்  வரவேண்டும்.  "
என்று  கூறி  அனைவரும்  புறப்பட்டார்கள். 
      தெய்வ  அருளால்,  கடலில்   எந்த  விக்னமும்,  இன்றி   துர்காபுர   ஆலயத்தை சென்று  அடைந்தார்கள்.
-----------
20
    இவர்கள் அனைவரும், இவ்வாறு  துர்கை  ஆலயத்தின்  ஸன்னதியை
அடைந்த  போது , அம்மன்  விக்ரஹம் முன்னால்   , பெண் பூசாரியாக  பைரவி  சுபத்ராதேவி   சிலைக்குப்   பூஜை  செய்து  கொண்டிருந்தாள். அருகே  ,சுபத்திரா தேவியை  பதினைந்து  ஆண்டுகளுக்கு   முன் , பேழையில்  கண்டெடுத்து,  உயிர்ப்பித்த மகரத்  தீவின், தன்வந்திரி  வைத்தியரும்  இருந்தார்.  மிகவும்  வயதாகி விட்டாலும்,   அவருக்கு நினைவுகள்   எதுவும் மறக்க வில்லை.  வந்துள்ளவர்கள்  யார்  என்று   சற்றே  திரும்பி  நோக்கிய பைரவி   சுபதராதேவிக்கு,  இத்தனை  ஆண்டுகளுக்குப் பிறகு,  தனது  உயிருக்கு  உயிரான  கணவன்
திவ்ய வர்மனைக் கண்டதும்  ,  வியப்பும் உவகையும் தாள   முடியவில்லை..   ஆனால், பைரவி  பெண்  பூசாரியாக  முகத்திரை  அணிந்து இருந்ததால் ,  திவ்ய வர்மனுக்கு அவளை   அடையாளம்  தெரியவில்லை.   கனவில்  அம்மன் கட்டளை    இட்டிருந்தபடி, திவ்யவர்மன்,  அம்மன்  முன்  பணிந்து " தேவியே! நீ  பணித்தபடி  என்   துயரக் கதையை   உன்னிடம்   கூறுகிறேன்.. நான் மங்களபுர மன்னன் திவ்யவர்மன். .. எனது   மனைவி ராஜகுமாரி  சுபத்ரதேவி.  அவள் நிறைமாத கர்ப்பிணியாக  இருந்த  போது , நாங்கள்  கப்பலில் மங்களபுரத்திற்கு திரும்பிச் சென்று   கொண்டிருந்தோம்.அப்போது   வீசிய , கடும் புயலில்,  எனது  ஆருயிர் மனைவி,  ஒரு  பெண்  குழந்தையை   ஈன்றுவிட்டு  அதன் முகத்தை  ஒரு   தடவை கூடக்    காணாமல், உயிர்  பிரிந்தாள் . நான் அவளது  உடலை  ஒரு  பேழையில்    வைத்து, கடல்  அலைகளில்  மிதக்க  விட்டேன்..பச்சிளம்   குழந்தை என   மகள் சாகரியை , மத்ஸ்ய தீவின் மன்னன் எனது   நண்பன்  சத்யேந்திரனிடம் கொடுத்து  வளர்க்கச்  .சொல்லி   ஒப்படைத்தேன்.. பல ஆண்டுகளுக்கு அவள்  அங்குதான்  வளர்ந்தாள் . பொறாமையினால், சத்யேந்திரனின் மனைவி, எனது  மகளை  அடியாள் வைத்துக் கொல்ல   முயன்றாள் .. தெய்வ அருளால், அவளைக்   கடல் கொள்ளையர் ,  கடத்திக்கொண்டுபோய், மயூர தீவின்  விடுதியில் அவளை விற்று  விட்டனர்.   சென்ற வாரம் தான், என்   செல்வ மகள் , என் முன் தோன்றி  எனக்கு மீண்டும்  வாழ்வளித்துள்ளாள். . இதுதான்  எனது  கதை" என்று  முடித்தான்.
---------------------
21
  இதைக்கேட்ட, சுபத்ரதேவி, இன்ப அதிர்ச்சியில் "  அரசே! அரசே! 
திவ்யவர்ம  அரசே! " என்று  அரற்றி , மயக்கமுற்றுச் சரிந்தாள். . "இந்தப்  
பெண்மணிக்கு என்ன   நேர்ந்தது!   கவனியுங்கள்"என்று  திவ்யவர்மன்  
பதறினான். .அப்போது  அங்கு  இருந்த  தன்வந்திரி வைத்தியர், "  கவலைப் படவேண்டாம்.!  நீங்கள்  இப்போது   கூறிய வரலாறு  உண்மையெனில்,   இந்த பைரவி  தங்களின் மனைவி  சுபத்திரா தேவி"   என்றார்.

 " அதெப்படி?  இதோ  இந்த இரண்டு  பாவப்பட்ட கைகளினால்  நானே அல்லவா. அவளது   சடலத்தை கடல்  அலைகளில்  மிதக்க விட்டேன்!"  என்று  புலம்பினான் திவ்யவர்மன்.   தன்வந்தரி வைத்தியர்  அப்போது , தான் எப்படி    அரசி  சுபத்திராதேவியை   பேழையில் அவளது  நகைகள், மற்றும் அதில்  இருந்த  செய்திச் சுருளுடன்  கண்டு, அவளை   மீட்டு எடுத்து  இங்கு  துர்கையின்    ஆலயத்தில்,  பைரவியாக  அனுப்பியது பற்றி  விபரமாக  விளக்கினார். 
  இதற்குள்,  ராணி  சுபத்ரதேவியும் மீண்டும்   நினைவுற்று, " என் அரசே!   என்னே எனது  பாக்கியம்!   நீங்கள்  திவ்யவர்ம  அரசர் தானே!    அவர்போலவே  தோற்றம்!அவர்போலவே   குரலும், பேச்சும்!  நீங்கள்  ஒரு  புயல், ஒரு  ஜனனம் , ஒரு மரணம்  பற்றி பேசினீர்களே !  என்னைத் தெரியவில்லையா? என்று  முகத்திரை   விலக்கி  அரசன் முன்  தோன்றி  மண்டியிட்டாள். " தெய்வமே! 
நான்   கேட்கும்-  இந்தக் குரல்  எனது  ஆருயிர்   இல்லாள்   சுபத்ரவின் குரல்  அல்லவா!  " ? என்று  வியந்தான். " ஆம்!  அரசே! நான்  தங்களது  இல்லாள்  சுபத்திரா  தான்"  ன்றாள் . 

தெய்வ  அருள்   மேல்  கொண்ட  பக்தி  மேலீட்டால், திவ்யவர்மன்  இரு  கரம் கூப்பி  அம்மனை வழிபட்டபோது, சுபத்திரா " அரசே! தங்கள்   விரலில்   ஒளிரும் அந்த  வைர  மோதிரம்,  எனது  தந்தை   நமது   திருமணத்தின் போது   தங்களுக்கு   அணிவித்ததல்லவா!" என்று  உறுதிப் படுத்தினாள் .
   " தெய்வமே! உனது   இப்போதைய கருணை,  எனது  கடந்த   காலத் துயரங்கள்  அனைத்தையும்  ஒரு   விளையாட்டு நாடகம்   போல மாற்றி விட்டன.  

வா!   எனதருமை சுபத்திரா! கடலில் அன்று நீ  இறங்கியது போல   இன்று எனது  நெஞ்சக கடலில்   ஆழ்ந்து   இறங்குவாய்! எனக்கூறி  அவளை   இணைத்துக் கொண்டான்.
---------------------
23
   " இது   வரை நான்  கண்டு  இன்புறாத  என்  தாயின்  அரவணைப்பிற்கு எனது   நெஞ்சம் ஏங்குகிறது  என்று  கூறி,  சாகரி   தனது  தாயை  கட்டி  அணைத்து   ஆனந்தக்  கண்ணீர்   வடித்தாள்.,,,   அரசன்   திவ்யவர்ன்மன் , தனது    மனைவியிடம் "  ,இவள்தான்  நமது  பெண்.   சாகரி !   உன்னைப் போலவே   அதிரூப சுந்தரி.!அற்புத குணவதி.!. ஆசீர்வதித்து , அருள்   பொழிவாய்!"என்று  கண்ணீர்   மல்க மகளை   அவளிடம் அளித்தான். 
    இந்த  சுப   வேளையில் , காருண்யம்  மிக்க  இந்த  துர்க்கா  தேவியின்,  ஆசியுடன்,  இளவரசன்   அமரசேனனுக்கு,  நமது  செல்வ மகள்  சாகரியை  திருமணம் முடிக்க   நிச்சயதார்த்தம் செய்வோம். " என்று    கூறினான். அவ்வாறே  நடந்து  முடிந்தது.     
----------
24
    வாழ்க்கையில்  எத்தனையோ   துன்பங்கள்    நேரிட்டாலும்,  திவ்யவர்மன் , சுபத்திரா தேவி, சாகரி ,  அமரசேனன்  போன்று  சற்றும்  நெறி  தவறாத நல்லோர்களுக்கு  , இறுதியில்   நல்லதே   நடக்கும். 

குணசீலன்  , தன்வந்தரி  போன்றுநேர்மையும்  ,திறமையும்  கொண்ட , பொதுநலம்  கருதும் நல்லோர்கள்,   இருக்கும் வரை  , உலகில்   நல்லறம் நிலைத்து  நிற்கும்  என்று கூறி  நாமும்  விடைபெறுகிறோம்!
                                                                     சுபம்!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@











 
 




 
 


Popular posts from this blog

MERCHANT OF VENICE ( in THAMIZH)

                                                        MERCHANT OF  VENICE                                                PLAY  BY  SHAKESPEARE  ( 1600) TALE     RETOLD    BY  MARY  LAMB ( 1800) ( Tales  from Shakespeare) Adaptation/ Translation  in Thamizh  (   தமிழ் ) by RSR =============================== This  is  the  tenth  tale   in the  proposed  10  tales. ------------------------------------------------------ ------------------------------------------------ INDEX TO THE OTHER TALES  IN THAMIZH AT https://shakespeare4tamils.blogspot.com/p/index-page.html original play by the BARD http://www.opensourceshakespeare.com/views/plays/plays.php http://www.opensourceshakespeare.com/views/plays/playmenu.php?WorkID=merchantvenice ------------------------------------------- The  original  text  of  the  tale by Mary Lamb  is at https://comediesmarylamb.blogspot.com/2020/02/merchant-of-venice.html?view=flipcard ------------------------------------------------- Name

ALL IS WELL THAT ENDS WELL

                     ALL'S  WELL THAT  ENDS WELL PLAY  BY  SHAKESPEARE  ( 1600) RETOLD  BY MARY LAMB  (1800) ADAPTED AND TRANSLATED  BY  RSR IN THAMIZH ========================================= COPY RIGHT  MATERIAL. ========================================== https://comediesmarylamb.blogspot.com/2020/03/alls-well-that-ends-well.html?view=flipcard                                                நல்லதே  வெல்லும் விதேஹ   நாட்டின்   மன்னன் , கீர்த்திசேகரன்..    தனது ஆருயிர்   நண்பன் ஜெயதேவன்   எதிர்பாராத விதமாக   இளம் வயதிலேயே   பிரிந்து விட்டதை   நினைத்து ,,   ஜெயதேவனின்   மகனை அரசவைக்குக் கொண்டு    வந்து   அங்கு ஒரு    முக்கிய   பதவியில்   அமர்த்த நினைத்து ,    அவனை   அழைத்து    வர , மிகவும்   அனுபவமிக்க , பண்பாளன் , கோமான்    சுதர்சனசேனனை பிரயாகை   நகருக்கு அனுப்பி     வைத்தான்.       ஜெயதேவனின்    மகன் பெயர்    விக்ரமசேனன்..   நல்லவன் தான்   .   எனினும் தனது    உயர்குலப்   பெருமை பற்றி   சற்று    கர்வம்    கொண்டவன்..   அவன் அன்னையின்   பெயர்   அனசூ

AS YOU LIKE IT (THAMIZH)

                                                                                                               Play by Shakespeare  ( 1600) Retold by  Mary Lamb   (1800)          ( Tales from Shakespeare) Adaptation/translation  by RSR  in thamizh  தமிழ்     AS YOU LIKE IT original english tale  at https://comediesmarylamb.blogspot.com/2020/02/as-you-like-it.html?view=flipcard ------------------------------------------------------ Fil m  with  subtitles at    h ttps://www.youtube.com/watch?v=u9hTxzLHU3I -------------------------------------------------------------------------- INDEX TO THE OTHER TALES  IN THAMIZH AT https://shakespeare4tamils.blogspot.com/p/index-page.html original play by the BARD http://www.opensourceshakespeare.com/views/plays/plays.php http://www.opensourceshakespeare.com/views/plays/playmenu.php?WorkID=asyoulikeit                                உ ங்கள்  விருப்பம்       நீலாம்புரம்  மிகவும்  அழகான  சிறிய ராஜ்யம்..  அடர்ந்த காட்டுப்   பகுதிய